அடேங்கப்பா.. இது தெரிஞ்சா இனிமே வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம்..!

Published by
K Palaniammal

Homemade soap-வீட்டிலேயே எளிமையான பொருட்களை வைத்து சோப்பு தயார் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்;

  • வேப்பிலை =ஒரு கைப்பிடி அளவு
  • துளசி = 20 இலைகள்
  • குப்பைமேனி =20 இலைகள்
  • தேங்காய் எண்ணெய்= அரை ஸ்பூன்
  • கிளிசரின் =[soap base] 100 கிராம்

செய்முறை;

துளசி, வேப்பிலை, குப்பைமேனி இலைகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் .அரைத்தவற்றை ஒரு துணியில் சேர்த்து துகள்கள் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை சூடேற்றி அதில் கிளிசரினை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அது சூடான பாத்திரத்தில் சேர்க்கும் பொழுது உருக தொடங்கிவிடும். நன்கு உருகி  பிறகு வடிகட்டி வைத்துள்ள சாரை 30 மில்லி அளவு அதிலே சேர்த்து கலந்து கொள்ளவும்.அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும் .

இதை தயாரிக்க இரண்டு நிமிடம் எடுத்துக் கொண்டாலே போதுமானது .அதிக நேரம் சூடுபடுத்த கூடாது. இப்போது இவற்றை சோப் அச்சில் [soap mode] சேர்க்கவும் . இந்த சோப் தயாராக மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

சோப் நன்கு  கெட்டித்தன்மை வந்தவுடன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு முன்பே எடுத்து விடக்கூடாது. ஏனென்றால் கிளிசரினில் உள்ள ரசாயனமும் நாம் சேர்த்துள்ள இலைகளில் உள்ள ரசாயனமும் வினைபுரிந்து ஜீரோ கெமிக்கலுக்கு மாற வேண்டும்.

அப்படி மாறுவதற்குள் நாம் எடுத்து பயன்படுத்தினால் தோளில் எரிச்சலை ஏற்படுத்தும் .அதனால் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த சோப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆயுர்வேத முறைப்படி சோப் தயாரிப்பதில் இரண்டு விதம் உள்ளது .

அதில் கோல்ட் ப்ராசஸ் [cold process]மற்றும் ஹாட் ப்ராசஸ் [ hot process]என உள்ளது. நாம் தயாரித்துள்ள முறை ஹார்ட் ப்ராசஸ் ஆகும்.இதில் வேப்பிலை, குப்பைமேனி சேர்த்துள்ளதால் அரிப்பு அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்தலாம் .மேலும் முகப்பருவிற்கும் ஒரு நல்ல தீர்வை தரும்.

எனவே கடைகளில் கிடைக்கும் அதிகம் கெமிக்கல் உள்ள சோப்களை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி சோப் செய்து பயன் பெறுங்கள் .

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

3 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

3 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

3 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

5 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

5 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

6 hours ago