pani poori [Imagesource : representative]
நம்மில் அதிகமானோர் வெளியில் சென்றாலே விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் பாணி பூரி முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த பாணி பூரியை நாம் கடையில் வாங்கி சாப்பிடும் போது, அதனை எந்த அளவுக்கு சுகாதாரமான முறையில் செய்கிறார்கள் என நமக்கு தெரியாது.
அதற்கு பதிலாக நாம் நம் வீடுகளிலேயே சுத்தமான முறையில் செய்வது சிறந்தது. தற்போது இந்த பதிவில் நாம் வீட்டிலேயே பாணி பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
பாணி பூரி
கடையில் 100 கிராம் பாணி பூரி பொறியை வாங்கி, வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் அதனுள் பொறியை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கிழங்கு மசாலா
முதலில் கிழங்கை அவித்து எடுத்து, அதனை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு மசித்து அதனுள் 1 ஸ்பூன் மிளகாய்தூள், நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாணி பூரி ரசம்
முதலில் மிக்சியில் புதினா மற்றும் கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், உப்பு சீரகம் ஆகியவற்றை போட்டு, சற்று தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள கலவையில், எலுமிச்சை பழத்தை பிழிந்து விட வேண்டும். பின் அதனுள் சிறிதளவு உப்பு சேர்த்து, நமக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவினால் பாணி பூரி ரசம் தயார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…