அடடே!தக்காளியை வைத்து இப்படி கூட செய்யலாமா?..

Published by
K Palaniammal

தக்காளியை வைத்து பலவிதமான உணவுகளை செய்திருப்போம் கார வகை உணவுகளில் இருந்து இனிப்பு பண்டமான தக்காளி அல்வா வரை என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு தக்காளி நம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தக்காளியை வைத்து ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பெரும்பாலும் திருமண வீடுகளில் மட்டன் பிரியாணி போன்ற பிரியாணி உணவுகளுக்கு இணை உணவாக இந்த தக்காளி ஜாம் வைக்கப்படும். ஆனால் இதை பெரும்பாலும் வீடுகளில் செய்திருக்க மாட்டோம். இந்த தக்காளி ஜாம் செய்ய குறைவான நேரமும் குறைவான பொருட்களை வைத்தும் மிக எளிமையாக செய்து முடித்து விடலாம்.

தேவையான பொருட்கள்

தக்காளி= அரை கிலோ
நெய்= நான்கு ஸ்பூன்
பட்டை= இரண்டு
கிராம்பு= இரண்டு
பேரிச்சம்பழம்= 10
சர்க்கரை= 200 கிராம்
உலர் திராட்சை= 10
முந்திரி= பத்து
ஏலக்காய்= ஒரு ஸ்பூன்

செய்முறை

தக்காளியை நன்றாக கழுவி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் வேகவைத்து கொள்ளவும். தக்காளியின் தோல் பிரிந்து வரும் அளவிற்கு வேகவைக்கவும். பிறகு  கைகளாலே மசிந்து விட வேண்டும். மிக்ஸியில் அரைப்பதை விட கைகளில் மசிந்து  விட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் நெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு ,முந்திரி, உலர் திராட்சை வறுக்கவும். பிறகு பேரிச்சம்பழம் சேர்த்து வேக விடவும். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து கிளறி சர்க்கரையும் சேர்க்கவும். இப்போது அது கெட்டியாக வரும் அளவிற்கு கிளறி விடவும். இறக்கும் சமயத்தில் ஏலக்காய் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய்சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். இப்போது சுவையான தக்காளி ஜாம் ரெடி.

நன்மைகள் 

தக்காளியில் விட்டமின் ஏ மற்றும் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது சருமத்தை பாதுகாப்பாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ளும். தோளில் உள்ள பழைய செல்களை நீக்கி புது செல்களை  உருவாக்கும்.

தக்காளியை நாம் அதிகம் எடுத்துக் கொண்டால் அதிலுள்ள ஆக்சலேட் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.மேலும் பித்தத்தையும் அதிகரிக்கும்  அதனால் குறைவாக அளவோடு பயன்படுத்துவதே சிறந்தது.

பிரட் சாப்பிடும் போது கடைகளில் வாங்கும் ஜாமை பயன்படுத்துவதை விட இது மாதிரி வீட்டிலேயே செய்து பயன்படுத்தினால் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். தக்காளி குறைந்த விலையில் கிடைக்கும் போதே இவ்வாறு செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால் 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம் அது மட்டுமல்லாமல் பிரியாணி செய்தால் அதற்கு  இணை உணவாகவும் இந்த ஜாமை வைத்து சாப்பிட்டு மகிழலாம்.

Recent Posts

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

16 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

34 minutes ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

10 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

10 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

11 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

12 hours ago