baby [Iamgesource : Representative]
குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களை மிகவும் பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள். அதிலும் முக்கியமாக உச்சிக்குழியை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். உச்சிக்குழி என்பது தலையின் உச்சியில் உள்ள ஒரு சிறிய, மென்மையான பகுதியாக உள்ளது.
பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே இந்த உச்சிச்சிக்குழி மிகவும் மென்மையாக தான் காணப்படும். இந்த உச்சிக்குழி குழந்தைகள் வளரும் போது, ஒரு வயது அல்லது ஒன்றரை வயதுக்குள் எலும்புகளால் மூடப்பட்டுவிடும். இது குழந்தையின் Soft Spot என கூறப்படுகிறது.
உச்சிக்குழியின் அளவு குழந்தைகளை பொருத்து மாறுபடும். சில குழந்தைகளில் உச்சிக்குழி சிறியதாக இருக்கும், மற்ற குழந்தைகளில் பெரியதாக இருக்கும். உச்சிக்குழியின் அளவு குழந்தையின் மூளையின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்தது.
குழந்தையின் தலையில் நான்கு பகுதியை சுற்றிலும், எலும்புகள் காணப்படும், தலையின் நடுப்பகுதியில் சிறிய பள்ளம் காணப்படும். அது தோள்களினால் மூடப்பட்டிருக்கும். அந்த தோல்களுக்கு கீழ் நேரடியாக குழந்தையின் மூளை காணப்படும். அதனை தொட்டுப்பார்த்தால் துடிப்பு தெரியும்.
சில சமயங்களில் மூளையில் ஏதேனும் கிருமி தொற்று காணப்பட்டால், குழந்தையின் உச்சிக்குழி வீங்கி விடும். அதேபோல் உச்சிக்குழி மிகவும் பள்ளமாக காணப்பட்டால், உடலில் நீர்சத்து குறைவாக காணப்படுகிறது என அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை ஏற்பட்டால், இவ்வாறு காணப்படும்.
சிலரது வீடுகளில் குழந்தைகளின் உச்சிக்குழியை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதில் குங்குமம், மஞ்சள், விபூதி போன்றவற்றை வைப்பார்கள். இப்படி செய்வது குழந்தைகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படி செய்வதால், உச்சிக்குழியின் மேல் உள்ள தோலில் அலர்ஜி ஏற்பட்டு, மிகவும் எளிதாக மூளையில் infection ஆக வாய்ப்புள்ளது.
அடுத்தாக உச்சிக்குழி மூடியபின்பு தான் மொட்டையடிக்க வேண்டும் என கூறுவார்கள். உச்சிக்குழி மூடுவதற்கு, மொட்டையடிப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனவே குழந்தை பிறந்து 2 மாதத்தில் இருந்தே மொட்டையடிக்கலாம்.
அதேசமயம் உச்சிக்குழி ஒன்றரை வயதாகியும் மூடாமலே இருக்கிறது என்றால், ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருத்தால், இரும்புசத்து, கால்சியம், வைட்டமின் D குறைவாக காணப்படுவது உச்சிக்குழி மூட சற்று காலதாமதம் ஆகலாம். இப்படிப்பட்ட சமயங்களில் மருத்துவரை அணுகி அதற்கான தீர்வுகளை காணலாம்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…