vadakari
வடகறி -வடகறி செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதில் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை இட்லி வேக வைக்கும் தட்டில் வடை போன்று தட்டி பத்து நிமிடம் வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் ,பச்சை மிளகாய்,பூண்டு 4,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும் .
தக்காளி அரைக்கும் போது ஒரு துண்டு பட்டை, ஒரு ஸ்பூன்சோம்பு, கிராம்பு , இரண்டு ஏலக்காய், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 4 பள்ளு சேர்த்து அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
பிறகு அதில் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி விடவும் ,அதன் பச்சை வாசனை போன பிறகு 600 ml தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
பிறகு நம் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை உதிர்த்து அதிலே சேர்த்துக் கொள்ளவும், அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் வடகறி தயாராகிவிடும்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…