அடடே! பூசணிக்காயில் இப்படி ஒரு கிரேவியா?..

Published by
K Palaniammal

குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த மஞ்சள்  பூசணிக்காயை வைத்து நாம் பொரியல், குழம்பு ,பச்சடி என்ன செய்து ருசித்திருப்போம். அந்த வகையில் இன்று மஞ்சள் பூசணிக்காயை வைத்து கிரேவி செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

  • மஞ்சள் பூசணி =அரை கிலோ
  • வறுத்த வேர்க்கடலை =100 கி
  • தேங்காய்= அரை மூடி
  • காய்ந்த மிளகாய் =5
  • பெரிய வெங்காயம் =1
  • மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
  • மிளகாய் தூள் =அரை ஸ்பூன்
  • மல்லித்தூள்= அரை ஸ்பூன்
  • கருவேப்பிலை =தேவையான அளவு
  • உப்பு =தேவையான அளவு
  • நல்லண்ணெய் =5 ஸ்பூன்

செய்முறை

பூசணிக்காயை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் சேர்த்து தாளித்து அதிலே பூசணிக்காயை  சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,மல்லி தூள்  தேவையான அளவு உப்பு மற்றும்  தண்ணீர் ஊற்றி காய் முக்கால் பதம் வரும்வரை வேக வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதிலே தேங்காய், வர மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக மிதமான தீயில் வறுத்தெடுக்கவும். பிறகு ஒரு மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை மற்றும் தேங்காயை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் இந்த அரைத்த விழுதை சேர்த்து கால் டம்ளர்தண்ணீர் ஊற்றி கலந்து கொதிக்க விடவும் அது பார்ப்பதற்கு கிரேவி படத்திற்கு இருக்க வேண்டும். பிறகு நாம்  செய்து வைத்துள்ள பூசணிக்காயை  அதிலே சேர்த்து மூன்று நிமிடம் கிளறி இறக்கவும். இப்போது  சுவையான பூசணிக்காய் வேர்க்கடலை கிரேவி ரெடி.

பூசணிக்காயின் பயன்கள்

பூசணிக்காயில் வாழைப்பழத்தை விட இரண்டு மடங்கு பொட்டாசியம் அதிகம் உள்ளது. பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இரைப்பை மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. கழிவுகளையும் நச்சுகளையும் வெளியேற்றுகிற,து கொழுப்பு கட்டி உள்ளவர்கள் பூசணிக்காயை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெப்டின்  என்ற வேதிப்பொருள் உள்ளதால் கொழுப்பை குறைத்து உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்

கால் வலி மற்றும் குடைச்சல் உள்ளவர்கள்

இதில் நாம் வேர்க்கடலையும் சேர்த்து செய்துள்ளதால் பாதாமுக்கு நிகரான கால்சியம் சத்தும் உள்ளது.ஆகவே வாரத்தில் 3 நாட்களாவது பூசணிக்காயை சேர்த்து அதன் சத்துக்களை பெறுவோம்

Recent Posts

இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.!

அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…

33 minutes ago

கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77),…

1 hour ago

ரோட் ஷோவில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் காயம்.!

பீகார் : ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் ஆராவில் நடைபெற்ற ‘பீகார் பத்லாவ் யாத்ரா’…

1 hour ago

வயது மூப்பால் கருணாநிதியின் மகன் மு.க. முத்து காலமானார்.!

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.…

2 hours ago

‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…

15 hours ago

வரதட்சணை கொடுமை வழக்கு – காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…

16 hours ago