coriander thokku
கொத்தமல்லி- கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் புளியும் பெருங்காயமும் சேர்த்து கிளறி விடவும் .
பிறகு மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை கிளறிவிட்டு அதிலே கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகள் ஓரளவுக்கு வதங்கினால் போதுமானது. பிறகு அதை ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்கவே கூடாது.
மீண்டும் மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறவும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.
பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும் . இப்போது சுவையான கம கமவென கொத்தமல்லி தொக்கு தயார். இது ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் சேகரித்து வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும். இட்லி தோசை சாதத்திற்கு மிக சுவையாக இருக்கும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…