coriander thokku
கொத்தமல்லி- கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் புளியும் பெருங்காயமும் சேர்த்து கிளறி விடவும் .
பிறகு மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை கிளறிவிட்டு அதிலே கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகள் ஓரளவுக்கு வதங்கினால் போதுமானது. பிறகு அதை ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்கவே கூடாது.
மீண்டும் மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறவும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.
பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும் . இப்போது சுவையான கம கமவென கொத்தமல்லி தொக்கு தயார். இது ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் சேகரித்து வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும். இட்லி தோசை சாதத்திற்கு மிக சுவையாக இருக்கும்.
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…