லைஃப்ஸ்டைல்

வாய்வு தொல்லைகளால் அவதிப்படுறீங்களா? இதோ உங்களுக்கான தீர்வு ரெடி….

Published by
K Palaniammal

நம் உடம்பில் உள்ள உணவுகளை வாயுக்கள் தான் மற்ற உறுப்புகளுக்கு தள்ளும் பணியை செய்கிறது. அதுவே அழகுக்கு மீறினால் நஞ்சாகிறது.

“வாய்வு இல்லாமல் வாதம் வராது ” வாய்வை அலட்சியப்படுத்துவது மிகவும் தவறு. அதனால் பல்வேறு விளைவுகளை நாம் சந்திப்போம். அதாவது மூட்டு வலி, வாதம்,வயிற்றுப்புண்போன்றவை ஏற்படும். உடலில் செரிமானம் நடக்கவில்லை என்றால் போதிய அளவு சத்து நமக்கு கிடைக்காது.

கண்டறிவது எப்படி:

சாப்பிட்ட உடன் தொடர் ஏப்பம், அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வருவது, பசியின்மை மலச்சிக்கல் போன்றவை ஆகும்.

காரணங்கள்:

  • சரியான நேரத்தில் சரியான உணவை எடுக்காமல் இருப்பது.
  • உழைப்பிற்கு தகுந்த உணவை எடுக்காமல் இருப்பது. மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள், காரமான உணவு வகைகளை எடுப்பது,பசிக்கும்போது சாப்பிடாமல் இருப்பது, வலி மாத்திரைகளை அதிக அளவு எடுப்பது, புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துவது, உடல் வலி, விதைப்பை வலி போன்றவைகள் ஆகும்.

சரி செய்யும் முறை:

  1. மோரில் பெருங்காயம் கலந்து சாப்பிடவும்.
  2. புதினா சட்னி அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
  3. சீரகத் தண்ணீர் குடிப்பது அதாவது சீரகத்தை வறுத்து அதை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை பருகவும். சீரகம் அகத்தை சீர்படுத்தும். அகம் என்றால் உடலாகும்.

வாயு சூரணம் செய்தும் சாப்பிடலாம்.எப்படி செய்வது னு பார்ப்போம் ;

இந்து உப்பு,பூண்டு, பெருங்காயம், சீரகம், ஓமம்,சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒரு ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதை பவுடர் ஆக்கி ஒரு கண்ணாடி பாட்டில் காற்று புகாதவாறு வைத்துக் கொள்ளவும்.

வாயு தொல்லை இருக்கும் போது கால் டீஸ்பூன் எடுத்து எலுமிச்சை சாறு நான்கு,ஐந்து சொட்டுகள் விட்டு சுண்டக்காய் அளவு உருட்டி சாப்பிட்டு வர வாயுத்தொல்லை நீங்கும்.

அல்சர் மட்டும் எரிச்சல் உள்ளவர்கள் எலுமிச்சைக்கு பதில் தேன் கலந்து சாப்பிடவும். இதை காலை இரவு உணவுக்குப் பின் எடுத்து வரவும். இது ஒரு மிகச்சிறந்த ஜீரணம் ஏற்றி மற்றும் வாயு அகற்றியாகும்.

ஆங்கில மருந்து எடுப்பவர்கள் ஒரு மணி நேரம் கழித்து எடுத்துக் கொள்ளவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

உருளை கிழங்கு, வாழைக்காய், மொச்சை, பட்டாணி மற்றும் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை  தவிர்க்கவேண்டும் .உருளை கிழங்கில் கிளைசீமிக் உள்ளதால் சர்க்கரைநோய்  வரும் .

ஒருவேளை சாப்பிட வேண்டிய சூழ்நிலை வந்தால் இஞ்சி பூண்டு புதினா சீரகம் இவற்றில் ஏதாவது சேர்த்து சாப்பிடவும் .

தொட்டதற்கெல்லாம் மாத்திரைகள் எடுப்பதை தவிர்த்து இந்த முறைகளை பயன்படுத்தி பயன்பெறுவோம்.

Published by
K Palaniammal

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

1 hour ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

2 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

2 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

2 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

3 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

3 hours ago