Apple [Imagesource : Representative]
குழந்தைகளுக்கு 6 மாதம் முதலே துணை உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பழங்கள், காய்கறிகள், புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.
அந்த வகையில், குழந்தைகளுக்கு கொடுக்க மிகசிறந்த பழம் ஆப்பிள். ஆப்பிள் சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
ஆப்பிளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, அது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள நார்சத்து செரிமான பிரச்னைகளை போக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக ஆப்பிளில் உள்ள கார்போஹைட்ரேட் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
6 முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஆப்பிளை கழுவி அதனை சாறு பிழிந்து கொடுக்கலாம் அல்லது ஆப்பிளை அவித்து அதனை குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு துண்டுகளாக வெட்டி கொடுக்கலாம்.
அதேபோல் ஆப்பிளை வேறு பழங்கள் காய்கறிகளுடன் சேர்த்து சாலட் செய்து கொடுக்கலாம். இந்த பதிவில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய வகையில் ஆப்பிள் கீர் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஆப்பிளை தோல் நீக்கி, துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி தண்ணீர் விடாமல் கெட்டியாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து பாலை இறக்கி விட வேண்டும்.
பின்பு கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் ஏலக்காயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் நெய்யை விட்டு துருவிய ஆப்பிளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஆப்பிளில் உள்ள நீர் வற்றி நன்கு சுருண்டு வந்த பின், ஆப்பிள் மற்றும் ஆறிய பாலுடன் கலந்து, பின் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காயை தூவி பரிமாறலாம்.
இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் கொடுக்க வேண்டும். ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இவ்வாறு கொடுக்கும்போது அவர்கள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…