நமது அன்றாட வாழ்வில், நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அதிலும், உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்கின்ற அனைத்து சமையல்களையும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான உருளைக்கிழங்கு மசாலா கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின், கேரட், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்க வேண்டும். பின் தேங்காய் துருவலில் பாதியை அரைத்து பால் எடுக்க வேண்டும். பின் மீதியை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கி விட்டு, தக்காளி, கேரட் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
இவை பாதி வதங்கியவுடன், உருளைக்கிழங்கு மற்றும் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின் தேங்காயில் இருந்து எடுத்த இரண்டாவது பாலை ஊற்றி காய்களை நன்றாக வேகா விட வேண்டும். வெந்தவுடன் முதல் பாலை ஊற்றி, சூடேறியதும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…