நமது அன்றாட வாழ்வில் தினந்தோறும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அந்தவகையில், தற்போது இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடிய பலகாரமான, பால்கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பாசி பருப்பை இதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு தண்ணீரில் கழுவி, குலைய வேக வைக்க வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுள் அரிசி மாவை சேர்த்து, நன்கு கிளற வேண்டும். அது கெட்டியானவுடன் இறக்கி, நெய் சேர்த்து பிணைந்து, பின் சிறு சிறு நீள்வட்ட வடிவில் உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் துருவலில் பால் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் மீண்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுள் கொழுக்கட்டையை போட்டு வேக விட வேண்டும். பின் அதனுள் பருப்பு, கருப்பட்டி கலவை, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். பின் இறக்கி பரிமாற வேண்டும். இப்பொது சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…