தொப்புளில் இரண்டு சொட்டு எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Published by
K Palaniammal

Oil benefits -தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன  நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு எண்ணெய்களுக்கும்  ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஏதேனும் ஒரு எண்ணெயை  இரண்டு சொட்டு வீதம் தொப்புளில் விட்டு மசாஜ் செய்து தூங்கினால் பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்:

நம்முடைய தொப்புள் பகுதியில் பின்புறம் பலவித நரம்புகள் பிணைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் ஒரு மைய புள்ளியாகவும் உள்ளது.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி இருமல் போன்ற தொந்தரவு ஏற்படாமல் தடுக்க முடியும், ஒரு சிலருக்கு உதடு மற்றும் பாதத்தில் வெடிப்புகள் புண்கள் இருக்கும் அவர்கள் தினமும் தொப்புளில் எண்ணெய் வைத்தாலே போதும்.

மேலும் கண்பார்வை திறன் அதிகரிப்பு, மாலைக்கண் நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பிற்காலத்தில் புரை  ஏற்படுவதையும் தடுக்கிறது. ரத்தத்தை  தூய்மையாக்குகிறது, முகப்பொலிவை அதிகரிக்கிறது.

உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உஷ்ணத்தால் ஏற்படும் தலைமுடி உதிர்வு ஏற்படுவதையும் குறைகிறது. மேலும் நரம்புகளை பலப்படுத்துகிறது.

எந்த எண்ணெய் தேய்த்தால் என்ன பலன் தெரியுமா?

நல்லெண்ணெய் 

பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி மற்றும் கருப்பை கட்டிகள் பாதிப்புகளின் தீவிரம் குறையும் ,ரத்த ஓட்டத்தை சீராக்கும்.உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும் .

விளக்கெண்ணெய்

மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள் விளக்கெண்ணையை தொப்புளில் பயன்படுத்தலாம். இது மன அழுத்தத்தையும் குறைக்கும் .ஆழ்ந்த தூக்கத்தையும் கொடுக்கும்.

வேப்ப எண்ணெய்

சரும பிரச்சனை உள்ளவர்கள் வேப்ப எண்ணையை தேய்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சொரியாசிஸ் ,எக்சிமா, சொரி, படை, அரிப்பு, தோல் வறட்சி போன்ற பிரச்சனைகளை தடுக்க கூடியது.

பாதாம் ஆயில்

பாதாம் ஆயிலை பயன்படுத்துவதால் சரும பொலிவு அதிகரித்து அழகு பெறலாம் , முகம் பளபளப்பை அதிகரிப்பது போன்ற பயன்களை கொடுக்கும்.

நெய்

நெய்யை தொப்புளில் பயன்படுத்துவதால் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது, வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

கடுகு எண்ணெய்

குடல் அலர்ஜி உள்ளவர்கள் கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம் மேலும் செரிமான தொந்தரவு, மலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்தும். புளித்த ஏப்பம் வருபவர்கள் இந்த கடுகு எண்ணெயை பயன்படுத்துவதால் குணமாகும். மேலும் உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய்  இருக்க வேண்டும் இதை நீங்கள் பயன்படுத்தும் போது தோல் வறட்சி குணமாகும். முகப்பொலிவு ஏற்படும் ,சளி இருமல் குறிப்பாக வறட்டு இருமல் ஏற்படுவது தடுக்கப்படும் .

உடல் உஷ்ணத்தை குறைக்கும்.பிறந்த குழந்தையின் தொப்புளின் புண் ஆறவும் சீல் பிடிக்காமல் இருக்கவும் இன்றும் தேங்காய் எண்ணெய் தான்  பயன்படுத்தப்படுகிறது .

இவ்வாறு தொப்புளில் எண்ணெய் தேய்த்து வருவதால் அதன் மருத்துவ நன்மைகளை பெறுவதோடு தொப்புளில் அழுக்கு அழுக்கு படிவதும் குறைக்கப்படுகிறது

இதுபோல் சிறிய சிறிய மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தாலே பல நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் “வருமுன் காப்பதே சிறந்ததாகும்”.

Recent Posts

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

20 minutes ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

42 minutes ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

1 hour ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

2 hours ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

2 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

3 hours ago