கோடை காலத்தில் ஏன் பாதாம் பிசினை சாப்பிட வேண்டும் தெரியுமா ?

Published by
K Palaniammal

பாதாம் பிசின் – பாதாம் பிசினின் நன்மைகள் , அதை எவ்வாறு எடுத்து கொள்ளலாம் என்பதை  பற்றி இப்பதிவில் காணலாம்.

பாதாம் பிசின்:

பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது, இது ஜிகர்தண்டாவில்  பயன்படுத்தப்படும் ஒரு பொருளும் கூட. உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடியது. இதில் ஏராளமான நுண் சத்துக்கள், தாது சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்,  விட்டமின் இ சத்துக்கள்  நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் பிசினின் நன்மைகள்:

  • உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று கடுப்பு, அல்சர் புண் ,முடி கொட்டுதல்,முகப்பரு ,வேனை கட்டி  போன்ற பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
  • அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சனை ஏற்படும். இந்த சமயத்தில் பாதாம் பிசினை எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பாதாம் பிசினை கொழுப்பு இல்லாத பாலில் கலந்து குடித்து வரலாம்.
  • உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் கொழுப்பு உள்ள பாலில் இரவு நேரத்தில் கலந்து குடித்து வரலாம்.
  • நாள்பட்ட  நோயால் பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்தவர்கள், பாதாம் பிசினை வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் விரைவில்  உடல் எடை கூடும்.
  • சிறுநீரகப் பிரச்சனை ,சிறுநீரக எரிச்சல், நீர் கடுப்பு போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் தரும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கக் கூடியது.
  • ஆண்மை குறைவை போக்க  ஊற வைத்த பாதாம் பிசினை ஒரு ஸ்பூன் அளவு வெதுவெதுப்பான பாலில் இரவு வேளையில் கலந்து குடிக்கவும்.
  • மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ,மாதவிடாய் சுழற்சி கோளாறு போன்றவற்றை சரி செய்ய காலை, மாலை என ஒரு ஸ்பூன்  மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளவும்.
  • கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வதால் கருவில் உள்ள குழந்தையின் எலும்புகள் வலுவாகும்.மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் .
  • ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்கும், ஞாபக சக்தியை தரும். பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படுவதை தடுக்கும். மூலநோய் உள்ளவர்களுக்கும் பாதாம் பிசின் அருமருந்தாகும்.
  • பாதாம்  பிசினை தீக்காயம் ,வெட்டு காயம், உள்ள இடத்தில்   தடவி வர விரைவில் குணமாகும்.

எடுத்துக் கொள்ளும் முறை:

பாதாம் பிசினை இரவில் சுத்தம் செய்து 5 கிராம் அளவு ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு பெரியவர்கள் என்றால் ஒரு ஸ்பூன் விதமும், சிறியவர்கள் என்றால் அரை ஸ்பூன் வீதமும் எடுத்துக் கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வது போதுமானது. இதை தண்ணீர், ஜூஸ், பால், சர்பத் போன்ற பானங்களில் கலந்து குடிக்கலாம்.தினமும் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவர்கள்:

அலர்ஜி, ஆஸ்துமா,சைனஸ்  உள்ளவர்கள் தவிர்க்கவும் ஏனென்றால் இது உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்க கூடியது அதனால் சளி தொந்தரவை ஏற்படுத்தும்.

ஆகவே அளவோடு எடுத்துக்கொண்டு பாதாம் பிசினின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெறுவோம்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago