லைஃப்ஸ்டைல்

Meen Pollichathu மதிய உணவுக்கு அடி போலியான மீன் பொழிச்சது செய்வது எப்படி?

Published by
Dinasuvadu Web

நம்மில் பலருக்கும் மீன் என்றாலே பலருக்கும் நாக்கு உறுவது உண்டு. ஏனென்றால், மீன் சுவையாகவும் அதே போல நம்மளுடைய கண்களுக்கும் நல்லது. எனவே வாரத்தில் இரண்டு முறையாவது நம்மளுடைய வீட்டில் மீன் எடுத்து குழம்பு வைப்பது மீனை வறுத்த அல்லது பொறித்து சாப்பிடுவது உண்டு. ஒரு சிலர் மீன் இருந்தும் வித்தியாசமாக எதாவது செய்து சாப்பிடலாம் என விருப்பப்படுவது உண்டு.

ஆனால், அவர்களுக்கு என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என தெரியாமல் மற்றவர்களிடம் கேட்டு செய்வார்கள். ஒரு சிலர் குழப்பத்திலேயே இருப்பார்கள். அவர்களுக்காகவே அசத்தலான மதிய உணவுக்கு  “மீன் பொழிச்சது ” செய்வது எப்படி அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை  என்பதை விவரமாக காணலாம்.

மீன் பொழிச்சது செய்ய தேவையான மீனை எடுத்துக்கொள்ள வேண்டும்.இப்பொழுது மீனில் உள்ள செதில் கூடல் ஆகியவற்றை நீக்கி நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது காரத்திற்குத்தேவையான வரமிளகாவை எடுத்துக்கொள்ள வேண்டும். 1 1/2தேக்கரண்டி மிளகு, 75கி இஞ்சி மற்றும் பூண்டு,ஒரு கையளவு வரக்கொத்தமல்லி  ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் எடுத்துவைத்திருக்கும் பொருட்களை தனித்தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொருட்களை அரைப்பதற்கு மிக்ஸிசியை விட வீட்டில் அம்மி இருந்தால் மிகவும் சிறப்பு அது கூடுதலான நம் கைப்பக்குவ சுவையை நமக்கு கொடுக்கும்.

இதன் பின்னர் நாம் அரைத்து வைத்திருக்கும் வர மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை பாதி அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் .இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மசாலாக்கலவையை செய்யவேண்டும்.இப்பொழுது மசாலாக்கலவையுடன் பாதியளவு எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு பிணைய வேண்டும்.

இப்பொழுது சுத்தம் செய்து வைத்துள்ள மீனை நன்கு  கீறி விடவும் இதில் தயாரித்து வைத்துள்ள மசாலாவை மீனில் தடவி ஒரு அரைமணி நேரம் நன்கு  ஊறவைக்க வேண்டும்.அதன் பின்னர் நன்கு காய்ந்த தோசைக்கல்லில் எண்ணெய்யை ஊற்றி சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.மீனானது நாம் வழக்கமாக செய்யும் மீன் வறுவல் போல் வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் பொழிச்சது செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்களேன்- Pacharisi Payasam : பக்காவான பச்சரிசி பாயாசம் செய்வது எப்படி? அசத்தலான செய்முறை இதோ!

இதற்கு அடுத்தபடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்த நன்கு வதக்க வேண்டும். வெங்காயத்தை வதக்கும் போது தேவையான அளவு உப்பு ,எடுத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது ,தேவையான அளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள 250 கி தக்காளி ,அரைத்து பாதியாக எடுத்துவைத்திருந்த வரமிளகாய்,கொத்தமல்லியை சேர்த்து தக்காளி நன்கு வதங்கிய பின்னர் இறக்கிவிட வேண்டும்.

இப்பொழுதும் நாம் இருப்பது முக்கியமான தருணம் வாழை இலையில் மீனைமடித்து பொட்டலம் போல் கட்ட வேண்டும்.இதற்கு முன்னர் வாழை இலையை நெருப்பில் காட்ட வேண்டும்,இது வாழை இலை உடையாமல் இருக்க உதவும். அதைப்போல நல்ல நறுமணத்தை கொடுக்கவும் உதவும். அதன்பின்னர், எடுத்து வைத்திருக்கும் மசாலாவை மீனின் இரண்டு பக்கமும் வைத்து வாழை இலையை மடித்து கட்டிவிட வேண்டும்.

கட்டிய வாழை இலையை தோசைக்கல்லில் எண்ணெய்யை ஊற்றி சுட வேண்டும்.வாழை இலை எண்ணெய்யுடன் பிரண்டு அதன் நிறம் மாறும் பொழுது கல்லில் இருந்து இறக்கிவிட வேண்டும்.இப்பொழுது சுவையான மீன் பொழிச்சது தயார்.நாம் வழக்கமாக செய்யும் மீன் வறுவலை விட இப்படி வாழை இலையில் செய்வது நமக்கு புதுவிதமான சுவையை கொடுக்கும். இதனை நீங்கள் மத்திய உணவுடன் எடுத்துக்கொண்டால் கேரளா ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் அடி போலியாக இருக்கும்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

3 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

4 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

5 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

5 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

6 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

8 hours ago