கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!
பா.ம.க. கூட்டணி குறித்து இரண்டு, மூன்று மாதங்களில் முடிவு தெரிவிக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ தொடங்கிவிட்டது. உதாரணமாக பாமக கட்சி -அதிமுக -பாஜக கூட்டணியில் இணையுமா என்கிற கேள்வி தான் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. ஏற்கனவே, பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பை வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
அதைப்போலவே நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமகவில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய அவர் ” நிர்வாகிகள் நினைக்கும் படி இந்த குழப்பங்களுக்கு விரைவில் உங்களுடைய விருப்பப்படி புள்ளி வைக்கப்படும்” என பதில் அளித்தார்.
இப்படியான சூழலில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும், அதற்காக காத்திருக்க வேண்டும் என்றும் சென்னையில் கொடுத்த பேட்டியில் தெரிவித்தார். அரசியலுக்கு வயது ஒரு தடையில்லை என்று கூறிய அவர், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஆட்சி செய்ததையும், மலேசியாவில் 92 வயதில் மகாதீர் பிரதமராக பதவி வகித்ததையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம் 86 வயதாகிய தனது வயதைப் பற்றி சிலர் கிசுகிசுப்பதாகவும், ஆனால் வயது ஒரு எண்ணுக்கு மட்டுமே என்று அவர் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். ராமதாஸ், அரசியலில் வயது ஒரு பொருட்டல்ல என்று வலியுறுத்தினார். “எல்லா தலைவர்களையும் நான் நேசிப்பவன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர். தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்,” என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து பாமகவின் கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். “தேசிய கட்சியோடு இருக்கலாம் அல்லது மாநில கட்சியோடு இருக்கலாம்,” என்று கூறிய அவர், பாமக பாஜக மற்றும் அதிமுகவுடனான கூட்டணி வைக்கவுள்ளதாக பரவும் வதந்தி தகவலுக்கு ஒரு செக் வைத்தார்.