venthaya kanji
வெந்தய கஞ்சி– கசப்பு இல்லாமல் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
வெந்தயக் கஞ்சி உடல் சூட்டை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, முடி கொட்டுதல் போன்றவற்றை தடுக்கும். இந்த கஞ்சியை கோடை காலங்களிலும், பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும் செய்து குடித்து வரலாம்.
இந்த கஞ்சியை காலை நேரத்தில் குடிப்பது சிறந்ததாகும் மேலும் மாலை நேரத்தில் குடிப்பதால் உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தி சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
வெந்தயம் மற்றும் அரிசியை கழுவி இரவே தனித்தனியாக ஊறவைத்து விட வேண்டும். அப்போது தான் கசப்பு தன்மை போகும். காலையில் ஊற வைத்த அரிசி தண்ணீரை சிறிது எடுத்து விட்டு அதை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் அதிலேயே வெந்தயத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அதை ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதில் இந்த அரிசி வெந்தயத்தை சேர்த்து உப்பு சிறிது சேர்த்து பத்து நிமிடம் கிளறி வேக விடவும்.
வெந்த பிறகு அதில் உங்கள் சுவைக்கு ஏற்ப வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு காய்ச்சிய பாலை அதனுடன் சேர்த்து கலக்கவும். இப்போது வெந்தயக் கஞ்சி தயார். இதில் நீங்கள் தேங்காய் பால் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.
லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின்…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.…
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில்…
அகமதாபாத் : விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 12 அன்று,…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச…
டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி…