சத்தான கொண்டைக்கடலை சுண்டல் செய்யும் முறை.
நம்முடைய குழந்தைகள் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, தேநீருடன் சேர்த்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்பொழுது நாம் கடையில் வாங்கிக் கொடுக்கும் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் செய்து கொடுக்கக் கூடிய உணவுகளை கொடுப்பதை வழக்கமாக வைக்கவேண்டும்.
தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் முளைகட்டிய கொண்டைக் கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும். பின் இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதனுடன் நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவேண்டும். வதக்கியவுடன் வேக வைத்த கடலையை சேர்த்து கிளறவேண்டும். இறக்கும்போது சாம்பார் பொடி தூவி நன்கு கிளறி இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…