சத்தான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி?

Published by
லீனா

சத்தான கொண்டைக்கடலை சுண்டல் செய்யும் முறை. 

நம்முடைய குழந்தைகள் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, தேநீருடன் சேர்த்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்பொழுது நாம் கடையில் வாங்கிக் கொடுக்கும் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் செய்து கொடுக்கக் கூடிய உணவுகளை கொடுப்பதை வழக்கமாக வைக்கவேண்டும்.

தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • முளைகட்டிய – கொண்டைக்கடலை ஒரு கப்
  • கடுகு – அரை தேக்கரண்டி
  • சீரகம் – அரை தேக்கரண்டி
  • இஞ்சி – சிறு துண்டு
  • பச்சை மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • சாம்பார் பொடி – அரை தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கடலைப்பருப்பு, உளுந்து – தாளிக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் முளைகட்டிய கொண்டைக் கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும். பின் இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதனுடன் நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவேண்டும். வதக்கியவுடன் வேக வைத்த கடலையை சேர்த்து கிளறவேண்டும். இறக்கும்போது சாம்பார் பொடி தூவி நன்கு கிளறி இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

18 hours ago