நாம் நம் அன்றாட வாழ்வில் பல வகையான கிழங்குகளை பார்த்திருப்போம். பல வகையான கிழங்குகளை சாப்பிட்டு இருப்போம். ஒவ்வொரு கிழங்குகளும் பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல வகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. வாழை கிழங்கு வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கக்கூடிய வாழைக் கிழங்கும் பல்வேறு […]
ஏற்கனவே வெளியில் இருக்க கூடிய பிரச்சினைகள் பத்தாது என்பதை போல நமக்கு நம்மிடம் இருந்தே, பலவித உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகிறது. இதில் மிக மோசமான பிரச்சினையாக பலருக்கும் இருப்பது முடி பிரச்சினை தான். முடி கொட்டுதல், வெள்ளை முடி, பொடுகு, அரிப்பு இது போன்ற முடி பிரச்சினைகள் நம்மை மோசமான நிலைக்கு தள்ளுகிறது. இதில் இளம் வயதிலே நரை முடி வருவது தாங்கி கொள்ள இயலாத ஒன்று. ஆனால், இதற்கு வெறும் உருளைக்கிழங்கு […]
காதல் என்றாலே அதற்கு ஒரு தனித்துவம் எப்போதுமே இருக்கும். காதலுக்கு பலர் இன்றும் என்றும் இந்த பூமியில் சிறந்த எடுத்து காட்டாக உள்ளனர். லைலா-மஜுனு, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதி இப்படி உதாரணத்திற்கு பல காதல்களை சொல்லி கொள்ளலாம். காதலை போற்ற கூடிய தினமாக “காதலர் தினம்” உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்று இந்த காதலர் தினத்திற்கே வெட்டு வந்துள்ளதாம். இங்கு ஒரு நாட்டில் காதலர்கள் தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாம். […]
பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில், பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவக்குணங்களை பற்றி பார்ப்போம். இரத்தம் பிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்தமாக்குகிறது. ஹீமோகுளோபின் […]
இன்றைய நாகரீகமான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரிய இற்கையான உணவு முறைகளை மறந்து, மேலை உணவு முறைகளை பின்பற்றுகிறோம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நன்மை ஏற்படுவதில்லை. அதிகப்படியான தீமைகள் தான் ஏற்படுகிறது. காளான் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு வகை தான். இதில் இரண்டுவகை காளான்கள் உள்ளது. உணபதுக்கேற்ற காளான், நச்சு தன்மை உள்ள காளான். உண்பதற்கேற்ற காளானை தவிர்த்து, நச்சு தன்மையுள்ள காளான்களை உண்டால் உயிரை இழக்கக் கூடிய நிலை கூட ஏற்படலாம். […]
சின்ன பிள்ளைகளை “கொத்தமல்லி கொழுந்தே” என்று பல வீடுகளில் அழைப்பதுண்டு. இது கொத்தமல்லிக்கு கிடைத்த புனை பெயராகும், குழந்தைகளுக்கு கிடைத்த செல்ல பெயராகவும் இருக்கிறது. சமைத்து முடித்த பெரும்பாலான உணவுகளில் கொத்தமல்லியை இறுதியில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே சேர்ப்பதாக நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால், இந்த காரணத்தை போல மேலும் சில காரணங்களும் உண்டு. கொத்தமல்லியை வைத்து உடல் எடை முதல் அதிகமாக சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் வரை மிக எளிதாக குறைக்க முடியும். எப்படி இது சாத்தியப்படும் […]
வயிற்றுப்புண்கள் அதுவாக உருவாக்குவதில்லை, நாமாக வரவழைத்து கொள்வது தான். நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இரைப்பையில் இந்த அமிலம் அதிகமாக சுரந்து சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் நமது குடல்களில் ஏற்படும் புகழுக்கு தன அல்சர் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். அதிகம் உண்பதை தவிர்த்தல் நாம் நமது உணவு முறைகளை சரியான முறையில் கைக்கொள்ளாமல் இருப்பது […]
இளமைப்பருவத்தில் நாம் தூங்காமல் பல விஷயங்களையும் செய்து கொண்டிருந்திருப்போம்; ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்ததும் பலருக்கும் சரியாக தூக்கம் வருவதில்லை. எவ்வளவு முயற்சித்து பார்த்தாலும் தூக்கம் என்பது மட்டும் எட்டாத வரமாகி விடும்; தூக்கம் சரிவர கிடைக்காததாலேயே உடல் நோய்களின் கூடாரமாகிவிடத் தொடங்கும். தூக்கம் எனும் ஒற்றை விஷயம் கிடைக்காததால், வாழ்க்கையே பிரச்சனைகள் நிறைந்ததாக, மகிழ்ச்சி – நிம்மதியற்றதாக மாறிவிடும். ஆகையால் இந்த தூக்கமின்மை என்ற பிரச்சனைக்கு துரிதமாக முடிவு கட்ட வேண்டியது அவசியம். இரவில் […]
உண்மை நிலை அறியாமல் எந்தவொரு விஷயத்திலும் ஒரு தரப்பை ஆதரித்து அல்லது உண்மை அறிந்திருந்தும் ஒருதலை பட்சமாக முடிவெடுக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருப்பதுண்டு; இந்த பழக்கம் உறவுகளைக் காப்பாற்ற, சுய லாபம் போன்ற காரணங்களால், வாழ்வின் ஏதேனும் ஒரு சூழலில் ஏற்பட்டுவிகிறது. ஏற்பட்ட பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் அதை அப்படியே தொடர்வதால், இது வழக்கமாகிவிடுகிறது; இப்பழக்கம் உள்ள நபர்கள் நிச்சயமாக அதை மாற்றிக்கொள்ள முயல வேண்டும். இதை எப்படி மாற்றுவது என்பதற்கான சில எளிய வழிகள் இந்த பதிப்பில் […]
தொப்பையினால் அவதிபடுவோர் அதிகமாக உள்ளனர். பத்தில் 5 பேருக்கு தொப்பை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், ஒரே இடத்தில் நாள் கணக்கில் உட்கார்ந்திருத்தல், உடற்பயிற்சி இன்மை இது போன்ற காரணிகள் தான் தொப்பைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு தீர்வே இல்லையா என்று ஆவலாக இருக்கும் உங்களுக்கான, தீர்வை இஞ்சியும் சீரகமும் தருகிறது. இதை தொடர்ந்து குடித்து வந்தால் மிக எளிதாக தொப்பையை குறைத்து விடலாம். மேலும், […]
இந்திய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவு பொருள் பூண்டு. பல மருத்துவ குணங்களை இது தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. உடலில் உண்டாக கூடிய பல்வேறு நோய்களுக்கு இது தீர்வாக உள்ளது. இப்படிப்பட்ட பூண்டு தான் உங்களின் தூக்கத்திலும் உதவ போகிறது. ஹோர்மோன் பிரச்சினை முதல் தூக்கமின்மை வரை ஒரு பல் பூண்டினால் குணப்படுத்தி விட இயலும். இந்த பதிவில் தூங்கும் முன் ஏன் பூண்டை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும் என்பதற்கான உண்மை காரணத்தை தெரிந்து […]
இன்றைய உலகில் அதிமானோருக்கு மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடை அதிகரிப்பால் பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவங்களை மேற்கொள்ளும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். உடல் எடை எடை அதிகரிப்பை நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் போது நல்ல தீர்வை காணலாம். அதிகமான புரதம் நாம் நமது உணவில் அதிகமான புரதங்களை சேர்த்துக் கொள்ளும் போது, உடல் எடையை குறைக்கலாம். புறத்தில் […]
மக்களில் பலர் பற்பல மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்; அந்த மூடநம்பிக்கைகளில் முக்கியமானவை உடல் பாகங்கள் சுத்தம் தொடர்பான்வை தான். அதிக முறை பல் தேய்த்தால் பற்கள் வெள்ளையாகிவிடும் என்பது போன்ற முட்டாள் தனமான விஷயங்களை பலர் பின்பற்றி வருகின்றனர். இந்த பதிப்பில் உடல் சுத்தம் தொடர்பாக, மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் முட்டாள் தனமான பழக்க வழக்கங்களின் உண்மை நிலை குறித்து காணலாம். தலைக்கு குளித்தல் அடிக்கடி அல்லது தினந்தோறும் தலைக்கு குளிப்பதால் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து விடலாம் […]
முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. முசுமுசுக்கை இலை கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் […]
இப்போதுள்ள மனிதர்களின் வாழ்நாள் மிக குறைவு என்றே சொல்லலாம். இதை அதிகரிக்க உலக நாடுகளில் பலவித ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நம் முன்னோர்கள் நீண்ட ஆயுடன் வாழ்வதற்கு பல குறிப்புகளை நம்மிடமே விட்டு சென்றுள்ளனர். கோவில்களின் தூண்கள், கல்வெட்டுகள், பாறைகள் போன்றவற்றில் ஏராளமான தகவல்களை மூதாதையர்கள் பதிந்து வைத்துள்ளனர். இவை அனைத்துமே நாமும் அவர்களை போல நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான். இவர்கள் குறிப்பிட்ட உணவுகள் […]
இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை. இயற்கை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல வளங்களை கொண்டுள்ளது. அனைத்து மரம், செடி, கொடிகளும் ஏதோ ஒரு விதத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக தான் உள்ளது. இந்த பதிவில் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்களையும், அவை குணப்படுத்தும் நோய்களை பற்றியும் பாப்போம். செங்காந்தள் பூ பல மருத்துவ குணங்களை கொண்ட பூ. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]
இன்றைய கால கட்டத்தில் தொழிற்நுட்பங்களின் பங்கீடு மிக அதிகமாகவே உள்ளது. பலவித தொழிற்நுட்பங்கள் இங்கு இருந்தாலும் மக்களை கட்டி போடும் திறன் அதிக அளவில் உள்ளவை ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகள் தான். இதன் திரையை அதிக நேரம் பார்த்து கொண்டே இருந்தால் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் பலவித பாதிப்புகள் உண்டாகும். இவை உங்களின் முகத்தையும் பாதிக்க செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முகத்தில் கருவளையங்களை உண்டாக்க கூடிய தன்மை இதற்கு உண்டு. கருவளையங்கள் நாளுக்கு […]
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. இந்த பழத்தில் பல வகையான பழங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான பழங்களும் பல வகையான நோய்களை குணமாக்குகிறது. சத்துக்கள் : ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ […]
வாரத்தின் 7 நாட்களில், நம்மில் பெரும்பாலானோர் வெறுக்கும் தினமாக திகழ்வது திங்கள் ஆகும்; திங்கள் என்பதை வேலைக்கு செல்ல நிர்பந்திக்கும் தினமாக நினைத்து வெறுக்காமல், புது தொடக்கத்தின் ஆரம்பமாக நினைக்க தொடங்க வேண்டும். ஏன் அப்படி தெரியுமா? திங்கள் முதல் வெள்ளி வரை வீடு, வேலை என பல தொல்லைகளுக்கிடையே சிக்கி இருந்து விட்டு, சனி – ஞாயிறுகளில் தான் ‘ஹப்பா’ என மூச்சு விடவே முடியும்; இப்படித்தான் இருக்கிறது இன்றைய சூழல்! நடைமுறைப்படுத்தும் நாள் – […]
ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியாளராக திகழ வேண்டும் என எத்தகு ஆசை கொள்கின்றனரோ அதே அளவுக்கு, அழகானவர்களாக, மற்றவர் பார்த்து பொறாமைப்படும் வண்ணம் அழகு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்ற ஆசையும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது. மக்களின் அழகாக வேண்டும் ஆசையை நிறைவேற்ற பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும் தெரியுமா! அப்படி என்ன விஷயம் என யோசிக்கின்றீரா? அவ்விஷயம் மது அருந்துதல் ஆகும். அதிர்ச்சி அடைய வேண்டாம் நண்பர்களே! இந்த பதிப்பில் மது அருந்துவதால் பொலிவான […]