புற்றுநோய் என்பது ஒரு காலத்தில் உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டாலும், இன்று அதற்க்கான மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. வசதி படைத்தவர்கள் இந்த நோயை குணப்படுத்த பணம் செலவழித்து இந்த நோயை குணப்படுத்துகின்றன. ஆனால் நடுத்தர நிலையில் உள்ளவர்கள், ஏழைகள் பணம் செலவழிக்க முடியாத நிலையில், தங்களது உயிரை இழக்க கூடிய நிலை ஏற்படுகிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் : நமது உடலுக்கு பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்று நாம் அறிந்து […]
இன்றைய நாகரீகமான உலகில் வளர்ந்து வரும் நாகரீகம் என்கிற பெயரில் நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் நுழையும் மேலை நாட்டு உணவு முறைகள் நம்முடைய கலாச்சார முறைகளை மாற்றி விட்டது மட்டுமல்லாமல், நமது உயிருக்கு உலை வைக்கும் வகையில் பல விதமான நோய்களை பரப்பி விட்டுள்ளது. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக மாரடைப்பு கருதப்படுகிறது. இதற்கு காரணம் நமது தமிழ் கலாச்சாரத்தோடு, சேர்ந்த இந்த மேலை நாட்டு கலாச்சாரம் தான். இதற்கு தீர்வாக பல மருத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், […]
காலையில் எழுந்ததுமே நமது வயிற்றுடன் போராட வேண்டி இருக்கும். காலை கடனை முடிப்பதற்குள் மோசமான நிலையை நாம் அடைந்து விடுவோம். இப்படி தான் உங்களின் ஒவ்வொரு நாளும் செல்கிறதென்றால் உங்களுக்கான தீர்வை தருவதற்கே இந்த பதிவு. தினமும் நீங்கள் கஷ்டப்படும் மலச்சிக்கலை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தி விடலாம். இவை பல வருடங்களாக நம் பாட்டி வைத்தியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறைகளை இனி அறிந்து கொள்வோம். பாலும் நெய்யும் மலச்சிக்கலை குணப்படுத்தும் மிக […]
நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறோம்; நாம் செய்யும் செயல்களில் எது சரி, எது தவறு என்று மூளை எடுத்துக் கூறினாலும், தினம் வழக்கமான பழக்கத்தை மனம் கைவிட மறுக்கும். இவ்வாறு நம்மை அறியாமலேயே நாம் செய்யும் சில செயல்கள் கிருமிகளை பரப்பி, நம்மை நோய்த்தொற்றில் ஆற்ற வல்லது. இந்த பதிப்பில் நாம் செய்யும் எந்த செயல்கள் நிச்சயம் கிருமிகளை பரப்பி நோய்களை ஏற்படுத்தும் என்பதனை பற்றி படித்து அறியலாம். கழிவறை […]
இயற்கையில் உள்ள மரம், செடி, கொடிகளும் ஏதோ ஒரு வகையில் நமது உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் உள்ளது. இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்பதை படைக்கப்பட்ட இந்த மரம் செடி, கொடிகள் நிரூபித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த வகையில் முக்கனிகளில் முதன்மை கனியாக இருப்பது மா. இந்த மாமரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. மா மரத்தின் இலை ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட இலை என்றே கூறலாம்.இந்த இலை நமக்கு […]
சரும நோய்கள பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மருத்துவரை தேடி செல்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு அதிகமாக தீர்வு கிடைப்பதற்கு பதிலாக, பக்க விளைவுகள் தான் பலனாக கிடைக்கிறது. நாம் சரும பிரச்சனைகளுக்கு சேர்க்கை முறையில் தேர்வு காண்பதை விட இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகச் சிறந்தது. உடல் குளிர்ச்சி : தகரை செடி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேலும் இந்த உடலில் உள்ள சரும வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது. இது மலச்சிக்கலை போக்கக் கூடிய தன்மை கொண்டது. இந்த செடியில் காய்களை […]
வாழ்வில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனித்தன்மை கொண்டு வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டியது அவசியம். மனிதர்கள் தங்களுக்கென தனித்தன்மையுடன் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே போல் நன்றியுணர்வு, மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். எந்த உணர்வு இல்லாவிடினும், நன்றியுணர்வு கட்டாயம் மனிதனிடத்தில் இருக்க வேண்டும் என்று வள்ளுவரும் கூறிச்சென்றுள்ளார். இந்த பதிப்பில் மனிதர்கள் தங்கள் வாழ்வில் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமா என்று படித்து அறியலாம், […]
பொதுவாக நம்மால் எல்லா வித வாசனைகளையும் எளிதில் நுகர முடியும். நம் அருகாமையில் உள்ள பொருட்களை மிக விரைவாக நுகரலாம்; தூரத்தில் இருக்கும் பொருட்களின் மணம் அதிக வலியதாய் இருப்பின், அதையும் நம்மால் உணர இயலும். மனித நாசியால் ஒரு டிரில்லியன் வாசனைகளை நுகர முடியும் என்று அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த பதிப்பில், நம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் பற்றி தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்! நாசியின் குணம் ஏதேனும் […]
பல வகையான மருத்துவ பயன்கள் கொண்ட உணவு பொருள் தான் இஞ்சி. இதை நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்து கொள்வோம். உடல் ஆரோக்கியதை அதிகரிக்க கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. இதனை டீ போன்றோ அல்லது நீரில் கலந்து குடித்தாலோ பல நன்மைகள் நமக்கு உண்டாகும். இஞ்சியை இவ்வாறு குடிப்பதன் மூலம் நம் உடலில் 5 அற்புதங்கள் நடக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோய் இஞ்சி நீருடன் சிறிது எலுமிச்சை […]
உறவில் இருக்கும் நபர்கள் தங்களது துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். காதல் உறவாயினும் சரி, திருமண உறவாயினும் சரி, அதில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல், துணையை நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பதிப்பில் உறவில் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி, மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று பார்க்கலாம். இதுவும் கடந்து போகும் உறவில் உங்கள் துணை செய்த பிரச்சனையை நினைவில் வைத்து, அதைப்பற்றியே பேசி அவர் மனதை […]
முடி என்பது பலரால் நேசிக்கப்படும் முக்கியமான ஒன்றாகவே பல காலமாக உள்ளது. நம் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி அதை நினைத்து வருந்துகிறோமோ அதை விட பல மடங்கு அதிகமாகவே நம் முடியில் ஏற்பட கூடிய பாதிப்பை நினைத்து நாம் வருந்துவோம். குறிப்பாக இளம் வயதிலே நம் முடிகள் அனைத்துமே வெள்ளையாக மாறினால் அவ்வளவு தான். இளநரையை கருமையாக்க நம் வீட்டிலுள்ள பொருட்களே சிறந்ததாம். இனி, நரையை தடுக்க கூடிய சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் […]
நமது உடலில் இருக்க கூடிய கொலெஸ்ட்ராலில் அளவு அதிகமாகினால் நம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும். கொலெஸ்ட்ராலில் பொதுவாக இரு வகை உண்டு. இதில் நல்ல கொலஸ்ட்ரால் என கூறப்படுபவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த கூடியவை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் என்பவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் இதய நோய்கள், உடல் பருமன் முதலிய பல உடற்கோளாறுகள் உண்டாகும். இதை தடுக்க பாட்டி வைத்தியம் என்ன கூறுகிறது என்பதை இனி […]
திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமக்கள் தங்கள் திருமண வேலைகளின் பொழுது எந்த ஒரு விஷயத்தையும் மறந்து விடாமல் இருக்க வேண்டியது அவசியம்; ஏனெனில் வாழ்வின் மிக முக்கியமான நிலை மற்றும் நிகழ்வு என்பது திருமணம் ஆகும். இந்த நிகழ்வின் பொழுது அனைத்து உற்றார், உறவினர், நண்பர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரையும் அழைத்து அனைவரின் ஆசியையும் பெற்று மணவாழ்வை அமைப்பது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட முக்கிய நிகழ்வின் பொழுது மணமக்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து […]
மனித உடலுக்கு தேவையான அளவில் சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அவை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். இரத்தம் உடலில் சுரக்க இரும்புசத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நீர்ச்சத்தும் முக்கியம். இதன் அளவு குறைந்தால் ஒவ்வொரு பாகமாக செயல் இழக்க ஆரம்பிக்கும். உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் என்ன விதமான அபாயங்கள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம். மலச்சிக்கல் சரியான அளவில் நீர்சத்து உடலில் இல்லையென்றால் உங்களுக்கு ஏற்பட கூடிய அபாயம் மலச்சிக்கலே. இவை செரிமான […]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது. கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம். ஊட்டச்சத்துக்கள் இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், […]
பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள புளிச்சகீரையானது, பொதுவாக இந்திய பகுதிகளில் அதிக அளவில் விளையக்கூடிய ஒன்று. பெயருக்கு எர்ரார்ப்போல் புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புளிச்சகீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றோரு பெயரும் உண்டு. இரத்த அழுத்தம் : இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த இந்தக் கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மையாகும். உடல் குளிர்ச்சியாவதுடன் மந்தமும் நீங்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது. […]
நீண்ட காலம் இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு தான். ஆனால், இதை நிறைவேற்ற நாம் எதையுமே செய்வதில்லை என்பதே உண்மை. தினசரி ஒரு சில செயல்களை கடைபிடித்து வந்தால் நம் ஆயுள் தானாகவே கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிக ஆயுளை தர கூடிய அந்த பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து பயன் பெறுவோம். சாப்பாடு எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்கும் பழக்கம் மிக மோசமான […]
உடலில் இருக்க கூடிய உறுப்புகளில் மிக முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். குறிப்பாக சிறுநீரகத்தில் உருவாக கூடிய கற்கள் தான் சிறுநீரகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடிய தன்மை வாய்ந்தவை. இந்த கற்கள் உருவாகாமல் தடுக்க வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை பயன்படுத்தலாம். அவை என்னென்ன பொருட்கள் என்பதை இனி பார்ப்போம். சிட்ரஸ் உணவுகள் நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் அதிக அளவில் சிட்ரஸ் உள்ள உணவுகளை எடுத்து […]
இறைவன் கொடுத்த வரமான இயற்கையை நாம் நமது அன்றாட வாழ்வில் பல நோய்களை குணப்படுத்துவதற்காக பயன்படுத்துகிறோம். இந்த வகையில் நெருஞ்சில் இறைவன் நமக்கு கொடுத்த மிக அற்புதமான மூலிகை என்றே கூறலாம். மறுத்து மூலிகையான இதில், சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என பல வகைகள் உண்டு. இந்த மூலிகை செடியான நெருஞ்சில் செடியில் பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த மூலிகை செடியில், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த நெரிஞ்சிலின் […]
பெண்களில் பலருக்கு உடலில் ஏற்படும் பலவித மாற்றங்கள் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால் தலைமுடி உதிர்தல், உடைதல், வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதிலும் திருமண வயதில் இருக்கும் அல்லது திருமணம் நிச்சியிக்கப்பட்ட பெண்களின் தலைமுடி அடர்த்தி குறைந்து, அதிகம் உதிர்ந்து, உடைந்து காணப்படும் நிலை ஏற்பட்டால் மணக்கோலம் பாழாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பிரச்சனையை தடுக்க மிகக்குறுகிய காலத்தில் பதிப்பில் கூறப்பட்டிருக்கும் செய்முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கட்டாயம் முடிப்பிரச்சனை […]