லைஃப்ஸ்டைல்

ஆஹா! அண்ணாச்சியில் அண்ணாந்து பார்க்கக்கூடிய நன்மைகளா..!

Published by
K Palaniammal

அன்றாடம் கிடைக்கக்கூடிய ஒரு சில பழங்களில்  அண்ணாச்சியும் ஒன்று. குறைந்த விலையில் மிக மலிவாக கிடைக்கக்கூடிய இந்த பழம் நம் உடலில் பல மாயாஜாலங்களை செய்கிறது. இதில் மிக அதிக அளவில் விட்டமின் சி சத்து 131 சதவீதம் உள்ளது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட நேரம் நீடித்து இருக்கிறது.

இது ஸ்கர்வி  மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது.
இதில் உள்ள அதிக அளவிலான மாங்கனீஸ் சத்து உடலில் மெட்டபாலிசம் நடக்க ஏதுவாக அமைந்துள்ளது. ரத்தத்தில் மாங்கனிசு சத்து குறைந்த இருந்தால் வலிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த அண்ணாச்சி பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஆஹா! வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா…

ப்ரோமலின் இதில் அதிகம் உள்ளதால் புரோட்டின் மாலிக்கிள்ஸ்  சிறிதாக உடைத்து எளிதாக ஜீரணிக்க செய்து நம் உடலில் புரதம் எளிதில் உள்கிரகித்து   கொள்ள உதவுகிறது. வயதானவர்கள்  அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள புரோட்டின் எளிதில் ஜீரணிப்பதில்லை இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதை தவிர்க்க அசைவம் எடுத்துக் கொண்ட பிறகு அண்ணாச்சி பழத்தை  ஜூஸாக எடுத்துக் கொண்டால் அதில் உள்ள புரதம் எளிதில் செரிமானம் ஆகும்.

புண்களை ஆற்றும் வல்லமை இந்த அண்ணாச்சி பழத்திற்கு அதிகம் உள்ளது. குடல்  சம்பந்தப்பட்ட தொந்தரவு உள்ளவர்கள் அண்ணாச்சி பழத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கர்ப்ப காலத்தில் கடைசி மாதம் எடுத்துக் கொண்டால் எளிதில் சுகப்பிரசவம் ஆகும். இந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் போது ஒரு சிலருக்கு நாக்கில் அரிப்பு ஏற்படும் இதனை தவிர்க்க ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் முடக்குவாதத்திற்கு ஒரு சிறந்த அருமருந்தாகும். சிறந்த வலி நிவாரணியாகவும் உள்ளது.

தவிர்க்க வேண்டியவர்கள்:

இந்த அண்ணாச்சி பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது வயிற்று வலியை ஏற்படுத்தும். அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்கவும். மேலும் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை அறிந்து எடுத்துக் கொள்வது சிறந்தது. கருவுற நினைக்கும் பெண்கள் ஆரம்ப காலத்தில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Published by
K Palaniammal

Recent Posts

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

4 minutes ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

33 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

1 hour ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

2 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

2 hours ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

2 hours ago