உங்கள் சோம்பேறித்தனத்தை விரட்ட இந்த பதிவை படிங்க.!!

Published by
K Palaniammal

Laziness-சோம்பேறித்தனத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று இப்பதிவில் காணலாம்.

சோம்பேறியாக இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என வாழ்வியல் ரீதியாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஒரே படியில் நிற்காமல் அடுத்தபடியை நோக்கி செல்வது மிக அவசியம். இதற்கு தடையாக இருப்பது சோம்பேறித்தனம் தான். அதை உடைத்தெரிந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வு எடுக்கலாம். ஆனால் எந்த ஒரு வேலையுமே செய்யாமல் ஒரு சிலர் ஓய்வு எடுப்பார்கள் அதுதான் சோம்பேறித்தனம்.

சோம்பேறித்தனம் நீங்க கடைபிடிக்க வேண்டியவை :

இந்த சோம்பேறித்தனம் உங்களுக்கு எதனால் வருகிறது என்று முதலில் ஆராய்ந்து பாருங்கள். ஒரு சிலருக்கு ரத்த சோகை இருந்தால் கூட ஒருவித சோம்பல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அது போல் ஹார்மோன் குறைபாடு, அலைச்சல், ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும், முதலில் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

சோம்பேறி தனத்துக்கு முதல் எதிரி அப்புறம் பாத்துக்கலாம் என்ற வார்த்தை தான்.  நாம் ஒரு செயலை செய்ய எண்ணும்போது அப்புறம் பாத்துக்கலாம் என்று நினைப்போம் அதற்கு முதலில் இடம் கொடுக்கக் கூடாது. “அன்றே செய், நன்றே செய், இன்றே செய்” என்ற பழமொழிக்கேற்ப நல்ல காரியங்களை அப்பொழுதே செய்ய வேண்டும்.

தூக்கமின்மை காரணமாக கூட ஒரு சிலருக்கு சோம்பேறித்தனம் வரும். இரவில் நல்ல தூக்கம் இருந்தால் மட்டுமே பகலில் நன்றாக வேலை செய்ய முடியும். அதனால் இரவில் போதுமான அளவு உறக்கம் தேவை. நாமே நம்மை மோட்டிவேஷன் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் நமக்கென்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அப்படி குறிக்கோள் வைத்து செயல்படும் போது சோம்பேறித்தனம் முற்றிலும் உங்களை விட்டு நீங்கிவிடும். இந்த சின்ன சின்ன வழிமுறைகளை மேற்கொண்டாலே நீங்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வில் முன்னேற முடியும்.

Published by
K Palaniammal

Recent Posts

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

13 minutes ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

47 minutes ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

11 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago