rice flour (1)
Rice flour-அரிசி மாவை வைத்து நம் முக அழகை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.
அனைவரது இல்லங்களிலுமே மிக எளிமையாக கிடைக்கக் கூடியது அரிசி மாவு. சரும பிரச்சனைகளுக்கு அரிசி மாவு ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. ஜப்பானிய பெண்கள் மற்றும் கொரியர்கள் தங்கள் முக அழகை மேம்படுத்த அரிசி மாவையும், அரிசி மாவால் தயாரிக்கப்பட்ட கிரீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் தான் அவர்கள் முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று கண்ணாடி போல உள்ளது.
அரிசி மாவு 2 ஸ்பூன் ,முல்தானி மட்டி ஒரு ஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் இவற்றை கலப்பதற்கு பால் அல்லது தயிரை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழிவி வரவும், இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்து வரும் போது சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்கிவிடும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன் அரிசி மாவு மற்றும் பன்னீரை கலந்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் முகம் கழுவி வர வேண்டும் .தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்யும் போது முகப்பருக்கள் காய்ந்து வடு தெரியாமல் மறைந்து விடும்.
மூக்கு பகுதியில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும் .இதனால் அங்கு அழுக்கு படிந்து நாளடைவில் அது அரும்புகளாக மாறி குழி ஆகிவிடும். அரிசி மாவு 1 ஸ்பூன், காபி பவுடர் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் அரை ஸ்பூன், கற்றாழை ஜெல் அரை ஸ்பூன் இவற்றை கலந்து அரும்புகள் உள்ள இடத்தில் மட்டும் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்தால் வெள்ளை அரும்புகள் வெளியேறிவிடும்.
அரிசி மாவுடன் கற்றாழை ஜெல்லை கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழிவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது கருவளையங்கள் மறைந்துவிடும்.
வாரத்திற்கு ஒரு முறை உங்கள் முகத்திற்கு அரிசி மாவை கொண்டு ஸ்க்ரப்பிங்[scrubbing] செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்க்ரப்பிங் செய்யும் போது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கும். முகமும் பார்ப்பதற்கு மென்மையாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…