உங்க முகம் கண்ணாடி போல மாற அரிசி மாவே போதும்.!

Published by
K Palaniammal

Rice flour-அரிசி மாவை வைத்து நம் முக அழகை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.

அனைவரது இல்லங்களிலுமே மிக எளிமையாக கிடைக்கக் கூடியது அரிசி மாவு. சரும பிரச்சனைகளுக்கு அரிசி மாவு ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. ஜப்பானிய பெண்கள் மற்றும் கொரியர்கள் தங்கள் முக அழகை மேம்படுத்த அரிசி மாவையும், அரிசி மாவால் தயாரிக்கப்பட்ட கிரீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் தான் அவர்கள் முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று கண்ணாடி போல உள்ளது.

சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்க:

அரிசி மாவு 2 ஸ்பூன் ,முல்தானி மட்டி ஒரு ஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் இவற்றை கலப்பதற்கு பால் அல்லது தயிரை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழிவி  வரவும், இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்து வரும் போது சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்கிவிடும்.

முகப்பரு நீங்க:

இரவு தூங்கச் செல்வதற்கு முன் அரிசி மாவு மற்றும் பன்னீரை கலந்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் முகம் கழுவி வர வேண்டும் .தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்யும் போது முகப்பருக்கள் காய்ந்து வடு தெரியாமல் மறைந்து விடும்.

மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் நீங்க:

மூக்கு பகுதியில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும் .இதனால் அங்கு அழுக்கு படிந்து நாளடைவில் அது அரும்புகளாக மாறி குழி ஆகிவிடும். அரிசி மாவு 1 ஸ்பூன், காபி பவுடர் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் அரை ஸ்பூன், கற்றாழை ஜெல் அரை ஸ்பூன் இவற்றை கலந்து அரும்புகள் உள்ள இடத்தில் மட்டும் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்தால் வெள்ளை அரும்புகள் வெளியேறிவிடும்.

கருவளையம் நீங்க:

அரிசி மாவுடன் கற்றாழை ஜெல்லை கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழிவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது கருவளையங்கள் மறைந்துவிடும்.

வாரத்திற்கு ஒரு முறை  உங்கள் முகத்திற்கு அரிசி மாவை கொண்டு ஸ்க்ரப்பிங்[scrubbing] செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்க்ரப்பிங் செய்யும் போது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும்  இறந்த செல்கள் நீங்கும். முகமும் பார்ப்பதற்கு மென்மையாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

36 minutes ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

57 minutes ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

1 hour ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

2 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

2 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

3 hours ago