லைஃப்ஸ்டைல்

அரைக்கப் ரவை இருந்தால் போதும்..! தீபாவளிக்கு அசத்தலான ஸ்வீட் செய்யலாம்..!

Published by
லீனா

நாம் நமது வீடுகளில் தீபாவளி என்றாலே விதவிதமான பலகாரங்களை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் ரவையை வைத்து சுவையான பெங்காலி ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • ரவை – அரை கப்
  • பால் – 3/4 கப்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • சீனி – 1 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
  • பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி, நெய் சூடான பின்பு அதனுள் ரவை அரைக்கப் போட்டு  பச்சை வாசனை போகும் வரை ஐந்து நிமிடங்கள் கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனுள் முக்கால் கப் பாலை ஊற்றி நன்கு கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு சுகர் சிரப் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சீனி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதத்துக்கு வரும் வரை சூடேற்றி அதனுள் சிறிதளவு ஏலக்காய் தோலை போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு தயார் செய்து வைத்துள்ள ரவையில் ஏலக்காய் பொடி, சிறிதளவு பேக்கிங் சோடா, 2 டீஸ்பூன் பால் பவுடர் இவற்றை சேர்த்து அதனுள் அரைக்கப் பால் ஊற்றி நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின்பு தயார் செய்து வைத்துள்ள இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பொரித்தெடுத்தவற்றை சுகர் சிரப்பில் போட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிட்டு பரிமாறினால் சுவையாக இருக்கும். இந்த பலகாரத்தை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .

Published by
லீனா

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

12 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

38 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago