லைஃப்ஸ்டைல்

Thumb Sucking : உங்கள் குழந்தைகளுக்கு கை சூப்பும் பழக்கம் உள்ளதா..? அதனை நிறுத்துவது எப்படி…?

Published by
லீனா

குழ்நதைகள் செய்யக்கூடிய அனைத்து செய்கைகளுமே ரசிக்க கூடியதாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்ய கூடிய சில செய்கைகள் பெற்றோரை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட செய்கைகளில் ஒன்று தான் கை சூப்பும் பழக்கம். குழந்தை கை சூப்புவது இயல்பான செய்கையா என பெற்றோருக்கு யோசனை ஏற்படும்.

குழந்தைகள் கை சூப்புவது குழந்தைகளிடம் இருக்க கூடிய இயல்பான விஷயம் தான். குழந்தைகளிடம் இந்த பழக்கம் பிறந்த பின்பு வருவதில்லை. அந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, தங்களது கைகளை வாய்க்குள் வைக்கும் பழக்கம் இருக்கும்.  இந்த பழக்கம் குழந்தைகள் வயிற்றில் 8 மாதமாக இருக்கும் போதே இருக்கும். இது சாதாரணமாக விஷயம் தான்.

குழந்தை பிறந்து 3 மாதத்திற்கு பின் தொடர்ந்து தங்களது கைகளை சூப்ப தொடங்குவர். கட்டை விரல், இரண்டு விரல்கள் அல்லது கைகள் முழுவதையுமே வாயில் வைத்து சூப்புவார்கள். சில சமயங்களில் கைகள் முழுவதையுமே வாயில் வைத்து குழந்தைகள் வாந்தி கூட எடுத்திருப்பார்கள்.

குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், அவர்கள் மூளையின் செயல்பாடு சரியாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் மூளையில் ஏதேனும் பிரச்னை உள்ள குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருக்காது. குழந்தைகள் கைசூப்பும் போது, அவர்களது மூளை அமைதலான நிலைக்கு வரும் போது அப்படியே தூங்கி விடுவார்கள். குழந்தைகள் தங்களை தாங்களே அமைதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தான் கை சூப்பும் பழக்கம்.

பொதுவாக பெற்றோர்கள் கை சூப்புவதை நிறுத்த சூப்பி, மற்றும் சூப்பிக்குள் பழங்களை வைத்து சூப்ப கொடுப்பது என இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. இது மிகவியம் தவறான செயல். ஏனென்றால் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் எளிது. ஆனால், சூப்பி பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் கடினம். அதே சமயம் சூப்பிகளை அடிக்கடி கொடுக்கும் போது, பற்கள் உள்ள குழந்தைகளுக்கு பல் சம்பந்தமான பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கை சூப்பும் பழக்கக்கதை 2 வயது வரை அனுமதிக்கலாம். இந்த 2 வயது வரை குழந்தைகள் எப்போதெல்லாம் தாங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணர்கிறார்களோ, அதாவது தாய் அருகில் இல்லாத போது, பசி உணர்வு ஏற்படும் போது, தூக்கம் வரும் போது கை சூப்புகிறார்கள்.

2 வயதிற்கு மேல் குழந்தைகள் அதிகமாக கை சூப்புகிறார்கள் என்றால் அதனை தடுக்க வேண்டும். ஆனால், இதனை தடுக்க வேப்ப எண்ணெய் தடவுவார்கள். இது மிகவும் தவறானது. இது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட வலிப்பு ஏற்படும் போது, அது மூளையை பாதிக்கும்.

பெரும்பாலான குழந்தைகள் 2 வயதிற்கு மேல் கை சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுவார்கள். அப்படி விடாத குழந்தைகளுக்கு, குழந்தைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேச வேண்டும். அதாவது, நீ கை சூப்பாமல் இருந்தால் உனக்கு பிடித்த பொம்மையை வாங்கி தருவேன் என அவர்களிடம் கூற வேண்டும். அப்படி சொல்லும் போது அவர்கள் கை சூப்பாமல் இருக்க முயற்சிப்பார்கள்.

நாம் சொன்னதை கேட்டு குழந்தைகள் கை சூப்பாமல் இருக்கும் போது, அவர்களை பாராட்ட வேண்டும். அவர்கள் சூப்பும் கை விரலில் பேண்டேஜ், அல்லது கையுறை போட்டு விடலாம். அதே சமயம் குழந்தைகளை திட்டினாலோ, அடித்தாலோ அவர்கள் இந்த பழக்கத்தை மறைமுகமாக கடைபிடிப்பார்கள். குழந்தைகள் 2 முதல் இரண்டரை வயது வரை கை சூப்புவது பிரச்சனையில்லை, ஆனால் அந்த வயதையும் தாண்டி கை சூப்பும் போது மேற்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

9 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

9 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

10 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

11 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

11 hours ago