லைஃப்ஸ்டைல்

Thumb Sucking : உங்கள் குழந்தைகளுக்கு கை சூப்பும் பழக்கம் உள்ளதா..? அதனை நிறுத்துவது எப்படி…?

Published by
லீனா

குழ்நதைகள் செய்யக்கூடிய அனைத்து செய்கைகளுமே ரசிக்க கூடியதாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்ய கூடிய சில செய்கைகள் பெற்றோரை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட செய்கைகளில் ஒன்று தான் கை சூப்பும் பழக்கம். குழந்தை கை சூப்புவது இயல்பான செய்கையா என பெற்றோருக்கு யோசனை ஏற்படும்.

குழந்தைகள் கை சூப்புவது குழந்தைகளிடம் இருக்க கூடிய இயல்பான விஷயம் தான். குழந்தைகளிடம் இந்த பழக்கம் பிறந்த பின்பு வருவதில்லை. அந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, தங்களது கைகளை வாய்க்குள் வைக்கும் பழக்கம் இருக்கும்.  இந்த பழக்கம் குழந்தைகள் வயிற்றில் 8 மாதமாக இருக்கும் போதே இருக்கும். இது சாதாரணமாக விஷயம் தான்.

குழந்தை பிறந்து 3 மாதத்திற்கு பின் தொடர்ந்து தங்களது கைகளை சூப்ப தொடங்குவர். கட்டை விரல், இரண்டு விரல்கள் அல்லது கைகள் முழுவதையுமே வாயில் வைத்து சூப்புவார்கள். சில சமயங்களில் கைகள் முழுவதையுமே வாயில் வைத்து குழந்தைகள் வாந்தி கூட எடுத்திருப்பார்கள்.

குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், அவர்கள் மூளையின் செயல்பாடு சரியாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் மூளையில் ஏதேனும் பிரச்னை உள்ள குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருக்காது. குழந்தைகள் கைசூப்பும் போது, அவர்களது மூளை அமைதலான நிலைக்கு வரும் போது அப்படியே தூங்கி விடுவார்கள். குழந்தைகள் தங்களை தாங்களே அமைதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தான் கை சூப்பும் பழக்கம்.

பொதுவாக பெற்றோர்கள் கை சூப்புவதை நிறுத்த சூப்பி, மற்றும் சூப்பிக்குள் பழங்களை வைத்து சூப்ப கொடுப்பது என இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. இது மிகவியம் தவறான செயல். ஏனென்றால் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் எளிது. ஆனால், சூப்பி பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் கடினம். அதே சமயம் சூப்பிகளை அடிக்கடி கொடுக்கும் போது, பற்கள் உள்ள குழந்தைகளுக்கு பல் சம்பந்தமான பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கை சூப்பும் பழக்கக்கதை 2 வயது வரை அனுமதிக்கலாம். இந்த 2 வயது வரை குழந்தைகள் எப்போதெல்லாம் தாங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணர்கிறார்களோ, அதாவது தாய் அருகில் இல்லாத போது, பசி உணர்வு ஏற்படும் போது, தூக்கம் வரும் போது கை சூப்புகிறார்கள்.

2 வயதிற்கு மேல் குழந்தைகள் அதிகமாக கை சூப்புகிறார்கள் என்றால் அதனை தடுக்க வேண்டும். ஆனால், இதனை தடுக்க வேப்ப எண்ணெய் தடவுவார்கள். இது மிகவும் தவறானது. இது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட வலிப்பு ஏற்படும் போது, அது மூளையை பாதிக்கும்.

பெரும்பாலான குழந்தைகள் 2 வயதிற்கு மேல் கை சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுவார்கள். அப்படி விடாத குழந்தைகளுக்கு, குழந்தைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேச வேண்டும். அதாவது, நீ கை சூப்பாமல் இருந்தால் உனக்கு பிடித்த பொம்மையை வாங்கி தருவேன் என அவர்களிடம் கூற வேண்டும். அப்படி சொல்லும் போது அவர்கள் கை சூப்பாமல் இருக்க முயற்சிப்பார்கள்.

நாம் சொன்னதை கேட்டு குழந்தைகள் கை சூப்பாமல் இருக்கும் போது, அவர்களை பாராட்ட வேண்டும். அவர்கள் சூப்பும் கை விரலில் பேண்டேஜ், அல்லது கையுறை போட்டு விடலாம். அதே சமயம் குழந்தைகளை திட்டினாலோ, அடித்தாலோ அவர்கள் இந்த பழக்கத்தை மறைமுகமாக கடைபிடிப்பார்கள். குழந்தைகள் 2 முதல் இரண்டரை வயது வரை கை சூப்புவது பிரச்சனையில்லை, ஆனால் அந்த வயதையும் தாண்டி கை சூப்பும் போது மேற்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

Published by
லீனா

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

15 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago