arisi paruppu sadam
அரிசி பருப்பு சாதம் -சுவையான அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு ஒரு குக்கரில் நல்லெண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு, கடுகு, சீரகம் ,சோம்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சி ஒரு துண்டு துருவி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் ஐந்து பள் பூண்டு தட்டி சேர்த்துக் கொள்ளவும். நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்து வரும் வேளையில் மிளகாய் தூள் ,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஊறவைத்த பச்சரிசி ,துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து மசாலாவில் கலந்து விடவும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பின்பு 2.1/2கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும். பிறகு ஒரு கைப்பிடி கொத்தமல்லி ,நெய் சேர்த்து இறக்கினால் சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…