Mothers milk [Image source : Representive]
பொதுவாகவே மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடனேயே குழந்தைக்கு பால் கொடுக்குமாறு தான் மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், குழந்தைகளுக்கு முதன்முதலாக தாயிடம் சுரக்கும் சீம்பாலை கொடுக்க வேண்டும் என்பதால் தான்.
சீம்பால் என்பது தாய்ப்பால் சுரப்பதற்கு முன்பு தாய்மாரின் மார்பில் இருந்து சுரக்கும் ஒரு சிறப்பு வகை பால் ஆகும். இது குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அவை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாக்கிறது.
சீம்பாலின் நன்மைகள்
சீம்பால் குழந்தைக்கு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதோடு, இது குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. சீம்பால் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குறிப்பாக இது குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
சீம்பால் குழந்தையின் செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு, குழந்தைக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது. சீம்பால் குழந்தையின் எடை அதிகரிக்க உதவுகிறது. குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சீம்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன்பின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும்.
சீம்பால் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதில் குழந்தையை பாதுகாப்பதற்க்கு தேவையான புரத சத்து, வைட்டமின் சத்துக்களும் உள்ளது. இது குழந்தைக்கு முதல் நோய் தடுப்பு மருந்தாகும். எனவே சீம்பாலை குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…