Rajiv Gandhi Govt Hospital chennai [Image source : Wikipedia]
ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பெற்றோர் தஸ்தகிர் – அஜீஷா தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது மஹீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையின் போதே சில காரணங்களால் கை அழுகியதன் காரணமாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது.
அரசு மருத்துவமனை செவிலியர்களின் அலட்சியத்தால் மட்டுமே இந்த பாதிப்பை ஏற்பட்டது என குழந்தையின் தாய் புகார் கூறினார். இது தொடர்பாக மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு விசாரித்து வருவதாகவும் குழந்தைக்கு எதனால் இவ்வாறு ஆயிற்று என்பது தெரிந்துவிடும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்கு ஆஜராகும்படி குழந்தையின் பெற்றோருக்கும் விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். அதில் செவிலியர்களின் அலட்சியத்தால் தாங்களது குழந்தையின் கை பறிபோய் உள்ளது என்றும் ,ஆதலால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…