[Image Source : Twitter/@sunnewstamil]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதிவியேற்கிறார் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர்என் ரவி. ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம். அதன்படி, உச்சநீதிமன்ற கொலீஜிய பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக சஞ்சய் விஜயகுமாரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா கடந்த 24-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டி.ராஜா ஓய்வு பெற்றதால், சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த சமயத்தில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. அதன்படி, நாளை தலைமையை நீதிபதியாக பதிவு ஏற்கவுள்ளார்.
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…