சென்னை

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு.! 250 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்.!

Published by
மணிகண்டன்

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு தொடர்பாக 250 பக்க விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை அடையாறில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கலை கல்லூரியில் பரதநாட்டியம், இசை உள்ளிட்ட கலைகள் பற்றிய பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பேராசிரியர்கள் ஹரி பத்மன், ஸ்ரீநாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் புகார் தொடர்பான மாணவிகளின் இந்த போராட்டம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, மகளிர் ஆணையம் பரிந்துரை பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் கூறிய பாலியல் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை விவரங்களை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகாரின் பெயரில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் புகார் தொடர்பாக அங்கு பயிலும் மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து, சென்னை சைதைபேட்டை நீதிமன்றத்தில் மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் 250 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு இருந்த ஹரி பத்மன் நிபந்தனையின் பெயரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

14 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

57 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago