Gun shot in near chennai [File Image]
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே கரணை – புதுச்சேரி அருங்கல் சாலையில் காவல் ஆய்வாளர் முருகேசன் , எஸ்ஐ சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் குழு வாகன தணிக்கை சென்று கொண்டிருந்தது.
அந்த சமயம் ஒரு கார் வேகமாக சென்று காவல்துறை வாகனம் மீது மோதியது. இதில் காரின் உள்ளே இருந்த இரண்டு பேர் போலீசாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் எஸ்ஐ சிவகுருநாதன் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால், தற்காப்பு நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் முருகேசன் , எஸ்ஐ சிவகுருநாதன் ஆகியோர் அந்த இருவரையும் சுட்டனர்.
இதில் முதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சோட்டா வினோத் என்பவர் உயிரிழந்தார். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்துள்ளத. அதே போல, சுடப்பட்ட இன்னொரு ரவுடி ரமேஷ் மீதும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருத்துள்ளது. இரண்டு ரவுடிகளும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த எஸ்ஐ சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…