Veeranampatti Kaliyamman Temple [Image source : Express]
பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று கோவில் சீல்-ஐ மாவட்ட ஆட்சியர் அகற்றினார்.
கரூர் மாவட்டம் வீரணாம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கடந்த வைகாசி திருவிழாவின் போது பட்டியலின இளைஞர் கோவிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மாற்று சமூகத்தினர் அவரை உள்ளே விட மறுத்துள்ளனர்.
இந்த விவகாரம் இரு தரப்பினரையே பிரச்சனையாக உருவெடுக்க, வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால் வீரணாம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு கடந்த 8ஆம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கோவில் சீலை அகற்றினார் . அதன் பிறகு பட்டியலின இளைஞர் உட்பட அனைவரும் ஒன்றாக கோவிலில் வழிபாடு நடத்தினர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…