அரிசிக்கொம்பன் யானை பற்றிய வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
தேனி , கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, பொதுமக்களை தொந்தரவு செய்து வந்த அரிசி கொம்பன் யானையை தமிழக வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து பிடித்துள்ளனர். அதனை நெல்லை மாவட்டம் முண்டாந்துறை புலிகள் காப்பக பகுதி கோதையாறு வனபகுதியில் விட ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், அரிசி கொம்பன் ஏற்கனவே பழக்கப்பட்ட கேரள மாநிலம் மதிகெட்டான்சோலை வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்.
இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, தமிழக அரசு பல லட்சம் செலவு செய்து யானையை பிடித்துள்ளனர். இது பற்றி வனத்துறை அதிகாரிகள் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என கூறி வனவிலங்கு நல வாரிய சிறப்பு அமர்வு இதனை விசாரிக்க வேண்டும் என கூறி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…