ஆபூர்வ சூரியகிரகணம்…உலக மக்களை கவர்ந்த புகைப்பட கலைஞர் எடுத்த புகைப்படங்கள்

Published by
kavitha
  • இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அபூர்வ சூரியகிரகணம் தெரிந்தது.மக்கள் கண்டு ரசித்தனர்.அபூர்வ சூரியகிரகணத்தை புகைப்படக் கலைஞர் ஒருவர் கச்சிதமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
  • அந்த  புகைப்படம் மக்கள் மத்தியில்  பெரும்  வரவேற்வையும் பாராட்டுக்களையும்  குவித்து வருகிறது.
இந்தியா மற்றும் உலகில் சில நாடுகளில் சூரிய கிரகணம் தெரிந்தது.ஆனால் இது சற்று வித்தியாசமான சூரிய கிரகணம் ஆகும்.சந்திரன் சூரியனினுடைய மைய பகுதியை மறைத்து அதனுடைய வெளிப்புற விளிம்பு பகுதியானது ஒரு நெருப்பு வளையம் போல வட்டமாக தெரிந்தால் அதனை கங்கண சூரிய கிரகணம் என்று கூறுவர்.இதற்கு வளைய சூரிய கிரகணம் என்ற  பெயரும் உண்டு.கடந்த டிச.,26 அன்று அமாவாசை தினம் அந்த தினத்தில் தான்  கிரகணம் ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணம் ஆனது  முதன் முதலில் சவுதி அரேபியா நாட்டில் தான் தெரிய தொடங்கியது. அங்கு தொடங்கிய கிரகணத்தின் பாதையானது அப்படியே தென் கிழக்கு திசையை நோக்கி அரபிக்கடல் வழியாக நகர்ந்து இந்தியாவில் உள்ள கேரளாவின் வடக்கு பகுதி, கர்நாடகவின் தெற்கு பகுதி, தமிழகத்தின் வழியாக இலங்கை மற்றும் சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளை நோக்கி சென்றது.
இந்த நகர்வுகளை எல்லாம்  நன்றாக பார்க்க முடிந்தது. மேலும் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வுகளை மக்கள் கண்டு களித்தனர்.அதன் படி தமிழ்நாட்டில் மட்டும் 10 மாவட்டங்களில் இந்த சூரிய கிரணம் தெரிந்தது.தமிழ்நாட்டில்  நீலகிரி மாவட்டத்தில் தான் இந்த சூரிய கிரகணத்தை முதலில் பார்க்க முடிந்தது.
இவ்வாறு ஆபூர்வ சூரியகிரகணம் ஆனது நடைபெற்று கொண்டிருந்த வேளையில் அந்த அரிய  நிகழ்வை தனது புகைப்பட கருவியில் வித்தியாசமான முறையில்  புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞரான ஜோஷ்வா கிரிப்ஸ் விரும்பினார்.
அதன்படி புகைப்படம் எடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.அப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள பாலைவனம் ஒன்றில் சூரிய கிரகணத்தை ஒட்டகத்துடன் சேர்த்து பார்ப்பதற்கு ரம்மியாகவும் கனக் கச்சிதமாக புகைப்படம் எடுத்துள்ளார். அவர் எடுத்த அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ஜோஷ்வா கிரிப்ஸ் பதிவிட்டார். இந்த புகைப்படங்களை எல்லாம் கண்ட சமூகதளவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவி வருகிறது.மேலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Published by
kavitha

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago