வெடி வைத்து இடித்து நொறுக்கப்பட்ட கட்டிடம்-விதிமீறலுக்கு தக்க தண்டனை

Published by
kavitha
  • கொச்சியில் வெடி வைத்து இடித்து நொறுக்கப்பட்ட கட்டிடம்.
  • விதிமீறி கட்டப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவு படி இடித்து அகற்றம்.

கொச்சியில் மராடு அருகே 19 மாடிகளை கொண்ட ஹோலி பெய்த் மற்றும் 16 மாடிகளைக் கொண்ட ஆல்பா செரின் அதேபோல் தலா 17 மாடிகளை கொண்ட ஜெயின் கோரல் கோவ் கோல்டன் காயலோரம் உள்ளிட்ட 4 அபார்ட்மென்டுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.வழக்கினை விசாரித்த நீதிபதிகளான அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வானது பலகட்ட விசாரணைக்கு பிறகு  4 கட்டிடங்களையும் இடித்து தள்ளி அகற்ற  கடந்த ஆண்டு மே மாதம் கேரள அரசிற்கு உத்தரவிட்டது.

Image

ஆனால் இந்த உத்தரவினை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தது இந்த மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அங்கு வீடு வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்ற வீதத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள்  கூறினர்.

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவினை நிறைவேற்றும் பொருட்டாக கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான பணிகளை கடந்த அக்டோபர் 18 தேதி முதலே கேரள அரசு மேற்கொண்ட நிலையில் வெடிவைத்து தகர்ப்பதற்கான வேலைகள் கடந்த ஒரு மாத காலமாக அவற்றில் வெடி மருந்துகளை நிரப்பும் பணியானது நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அனைத்தும் முடிந்த நிலையில் பணிகள் முடிந்ததை தொடர்ந்து 2 கட்டிடங்களை நேற்று இடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று பகல் 11.17 மணி அளவில் எச் 2 ஓ ஹோலி பெய்த் கட்டிடம் வெடிவைத்து முதலில் தகர்க்கப்பட்டது. பின் சில நிமிட இடைவெளியில் ஆல்பா செரீன் கட்டிடமும் தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டது.கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது வெளிவந்த புழுதிகளை தண்ணீர் பீய்ச்சிக் கட்டுப்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை சரியாக 11 மணிக்கு ஜெயின் கோரல் கோவ் மற்றும் கோல்டன் காயலோரம் ஆகிய இரண்டு கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடந்ததாக இடிக்கும் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்றிய எடிபிஸ் என்ஜினீயரிங் நிறுவன இயக்குனர் உத்கார்ஷ் மேத்தா கூறியுள்ளார்.மேலும் இடிக்க  கட்டிடங்களில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் அனைவரும்  தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடிக்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் 1,600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

42 minutes ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

1 hour ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

3 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago