Categories: இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்.. கைதான இருவருக்கும் 10 நாட்கள் காவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று கைதான இருவருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல்.

பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி குண்டுவெண்டிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர். பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகாமையிடம் ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அந்தவகையில் கடந்த மாதம் வெடிகுண்டுகள் பொருட்கள் சப்ளை செய்ததாக கூறப்படும் முஸாமில் ஷெரீஃப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த சூழலில், மேற்குவங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்த முசாவீர் ஹுசைன் ஷாஸேப் மற்றும் அத்புல் மதீன் தாஹா ஆகிய இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் மறைமுகமாக இருந்ததை கண்டுபிடித்து  முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இன்று காலை பெங்களூருவிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில், நேற்று கைதான முசாவீர் ஹுசைன் ஷாஸேப் மற்றும் அத்புல் மதீன் தாஹா ஆகிய இருவருக்கும் 10 நாட்கள் என்ஐஏ காவல் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல் செய்த நிலையில், அனுமதி அளிக்கப்பட்டது

Recent Posts

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

20 minutes ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

41 minutes ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

1 hour ago

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

10 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

11 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

12 hours ago