Categories: இந்தியா

இதுபோன்று 100 சம்பவங்கள் நடக்கின்றன.. மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோவை கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என அம்மாநில முதல்வர் பேட்டி.

கடந்த சில மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளி ஊர்களில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும், மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து வருகிறது.

பெண்களுக்கு கொடூரம்:

இந்த சூழலில், மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் 77 நாட்கள் ஆன பிறகு வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

வலுக்கும் கண்டனம்:

இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கேள்வி எழுப்பி வருகின்றனர். கண்டங்களை தெரிவித்து, மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த மணிப்பூர் முதலமைச்சர் அந்த சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்தார்.

மணிப்பூர் முதலமைச்சர் வேதனை:

மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் கூறுகையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோவை கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இதுபோன்று 100 சம்பவங்கள் இங்கு நடக்கிறது அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஒரு வீடியோ மட்டுமே பரவி உள்ளது. இதனால் தான் மாநிலம் முழுவதும் இணையசேவை முடக்கப்பட்டது.

மனித இனத்திற்கே எதிரானது:

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இப்படி ஒரு குற்றம் மனித இனத்திற்கே எதிரானது, இதில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியை பெற்று தருவோம் என பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, மணிப்பூர் கலவரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் வேதனை தெரிவித்தார்.

மரண தண்டனை:

இதற்கு முன் அவரது ட்விட்டர் பக்கத்தில், 2 பெண்களுக்கு எதிராக நடந்த இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயல் நெஞ்சை கிழிப்பது போல் இருக்கிறது. இந்த வீடியோ வெளியான உடனேயே, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கையில் இறங்கி, இன்று காலை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டது. நமது சமூகத்தில் இதுபோன்ற கேவலமான செயல்களுக்கு இடமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும், மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்வோம் என குறிப்பிட்டிருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago