சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது நக்சல் தாக்குதலில் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உட்பட 11 வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சோதனை நடத்திவிட்டு வாகனத்தில் திரும்பிய போது, நக்சல்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்து டி.ஆர்.ஜி. ரிசர்வ் படையை சேர்த்த 11 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து, வீர மரணம் அடைந்து வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடினமான சூழலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…