சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது நக்சல் தாக்குதலில் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உட்பட 11 வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சோதனை நடத்திவிட்டு வாகனத்தில் திரும்பிய போது, நக்சல்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்து டி.ஆர்.ஜி. ரிசர்வ் படையை சேர்த்த 11 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து, வீர மரணம் அடைந்து வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடினமான சூழலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…