மஹாராஷ்டிராவில் சட்டசபை தலைவரை தகாத வார்த்தைகளால் பேசிய 12 பாஜக எம்எல்ஏ-க்கள் ஒரு ஆண்டிற்கு சஸ்பெண்ட்.
இன்று முதல் 2 நாட்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்த பட்டோலி ராஜினாமா செய்ததால் இடைக்கால சபாநாயகராக பாஸ்கர் ஜாதவ் செயல்பட்டு வருகிறார்.
இதனையடுத்து, சட்டசபையில் மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் தற்காலிக சபாநாயகரான பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்று, சபாநாயகரை அவதூறான வார்த்தையால் பேசிய நிலையில், கடும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அமளியில் ஈடுபட்டதாக கூறப்படும் பராக் அலவானி, ராம் சத்புட், சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், ஷிரிஷ் பிம்பிள், ஜெய்குமார் ராவல், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, மற்றும் கீர்த்திகுமார் பகடி ஆகிய 12 பேரை ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளார்.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…