ஹரியானாவில் உள்ள கொரோனா சிறப்பு சிறைச்சாலைகளில் உள்ள கம்பியை அறுத்து விட்டு 13 கைதிகள் தப்பித்து ஓடியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் எந்த ஒரு பகுதியில் உள்ள மக்களும் கொரோனாவிற்கு தப்பித்துவிடவில்லை என்று தான் கூறியாக வேண்டும். இதில் கைதிகள் மட்டும் விதிவிலக்கா என்ன, பல்வேறு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹரியானாவில் உள்ள கொரோனா சிறப்பு சிறைச்சாலையில் பல்வேறு கைதிகள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மொத்தம் 493 கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹரியானாவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 13 கைதிகள் சிறைச்சாலையின் சிறை கம்பியை அறுத்துவட்டு அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். தப்பித்த 13 கைதிகளுமே பாலியல் வன்கொடுமை, கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் எழுந்து வந்து சிறை அதிகாரிகள் கைதிகளை எண்ணும் பொழுது 13 கைதிகள் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்த அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். தற்போது இந்த கைதிகளை கண்டறிய நான்கு குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…