இந்தியா

5 மாநிலங்களில் ரூ.1,760 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், பணம் பறிமுதல்- தேர்தல் ஆணையம்..!

Published by
murugan

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. நவம்பர் 25-ம் தேதி ராஜஸ்தானிலும், நவம்பர் 30-ம் தேதி தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ரூ.1,760 கோடி மதிப்பிலான இலவசங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில்,  மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வகையான இலவசங்கள் மற்றும் போதைப்பொருள், பணம், மதுபானம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள்  உள்ளிடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐந்து மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு மொத்தம் ரூ. 1760 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ரூ. 239.15 கோடி மதிப்புள்ள பொருள்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை விட இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 7 மடங்குக்கும் அதிகமாகும்.

குஜராத், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்த 6 மாநில சட்டசபை தேர்தல்களில் ரூ.1400 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சட்டசபை தேர்தல்களை விட 11 மடங்கு அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மிசோரமில் பணம் , விலைமதிப்பற்ற உலோகம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் ரூ.29.82 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன.

Published by
murugan

Recent Posts

35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!

சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…

36 minutes ago

“தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…

1 hour ago

நார்வே செஸ் தொடர் : அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்!

நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…

2 hours ago

முதல் முறையாக கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? இறுதிப்போட்டியில் பெங்களூர் பஞ்சாப் மோதல்!

அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…

2 hours ago

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

11 hours ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

12 hours ago