உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ள 18 வயது இளம்பெண்.
உத்திரபிரதேசத்தின், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், ஆன்லைன் உதவித்தொகை பெறுவதற்காக, 18 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள சந்தை படிவத்தை நிரப்புவதற்காக சென்றுள்ளார்.
இந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், 22 மணி நேரத்திற்கு பிறகு, அப்பகுதியில் உள்ள வறண்ட குளத்தில் கிடப்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் உடலை பார்த்த, அப்பெண்ணின் தந்தையும், கிராமவாசிகளும், பெண்ணின் கழுத்து பகுதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கால் பகுதி விலங்குகளால் கடித்து குதறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பெண்ணின் மொபைல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அவர் அருகிலேயே கிடந்துள்ளது. பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அந்த கிராமத்தில் பட்டியல் சமூக பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…