உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ள 18 வயது இளம்பெண்.
உத்திரபிரதேசத்தின், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், ஆன்லைன் உதவித்தொகை பெறுவதற்காக, 18 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள சந்தை படிவத்தை நிரப்புவதற்காக சென்றுள்ளார்.
இந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், 22 மணி நேரத்திற்கு பிறகு, அப்பகுதியில் உள்ள வறண்ட குளத்தில் கிடப்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் உடலை பார்த்த, அப்பெண்ணின் தந்தையும், கிராமவாசிகளும், பெண்ணின் கழுத்து பகுதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கால் பகுதி விலங்குகளால் கடித்து குதறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பெண்ணின் மொபைல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அவர் அருகிலேயே கிடந்துள்ளது. பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அந்த கிராமத்தில் பட்டியல் சமூக பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…