முக்கியச் செய்திகள்

வயநாட்டில் நடந்த என்கவுன்டரில் 2 மாவோயிஸ்டுகள் கைது.. இருவர் தப்பியோட்டம்..!

Published by
murugan

வயநாடு-கண்ணூர் வனப்பகுதியில் கேரள காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது மாவோயிஸ்டுகளுக்கும், சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனிஷ் என்ற உள்ளூர்வாசியின் வீட்டில் மாவோயிஸ்டுகள் இரவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அவரது வீட்டில் இருந்து உணவு உண்டதாகவும் பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் கூட்டுக் குழுவினர் நேற்று இரவு சப்பர காலனிக்கு வந்தனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகளை சரணடையுமாறு போலீசார் கூறியதை அடுத்து மாவோயிஸ்டுகளுக்கும், கேரள காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைக்கும் இடையே நேற்று இரவு என்கவுன்டர் நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை அரை மணி நேரம் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடந்த என்கவுன்டரில் இரண்டு மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயம் அடைந்து தப்பியோடிய மாவோயிஸ்டுகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ரைபிள் துப்பாக்கியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

48 minutes ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

1 hour ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

3 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

4 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

4 hours ago