தடுப்பூசி செலுத்தினால் 20 கிலோ அரிசி இலவசம் – அருணாச்சல பிரதேசத்தில் அறிவிப்பு!

Published by
Rebekal

 தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம் என அருணாச்சல பிரதேசத்தில் அறிவிப்பு.

உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இவை செலுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் மாரடைப்பு ஏற்படும் என பல இடங்களில் வதந்திகளை கிளம்பி வருகிறது. இந்த வதந்திகளை ஒழிக்கும் விதமாக பல இடங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு சில சலுகைகளையும் அரசாங்கம் அறிவித்து வருகிறது. அது போல அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள ஸ்காலி என்னும் பகுதியிலுள்ள வட்ட அலுவலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடிய பொதுமக்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் குழப்பங்களை நீக்கும் வகையிலும், ஜூன் 20-ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடிய 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் 20 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

10 minutes ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

3 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

4 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

4 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago