Electricitybill [FileImage]
கர்நாடகாவில் 200 யூனிட்களுக்கு மேல் மின் பயன்பாடு இருந்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 கூடுதலாக செலுத்த வேண்டும்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 5 வாக்குகளை நிறைவேற்றுவதாக கூறியிருந்தது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றனர்.
இதன்பின், கர்நாடக முதல்வர் சீதாராமன் தலைமையில் மாநிலத்தின் முதல் முதலமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த கூட்டத்தில் 5 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு, திட்டங்கள் அமலுக்கு வரும் தேதியையும் சித்தராமையா அறிவித்தார்.
இதில் ‘க்ருஹா ஜோதி’ என்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் இந்த திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டத்தின் விரிவான வழிகாட்டுதல் மற்றும் நிபந்தனைகளை மாநில அரசு வெளிட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தின் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் மின் கட்டணத்தை செலுத்தும்போது 200 யூனிட்டுகளுக்கு மேல் மின் பயன்பாடு இருந்தால், ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த மின் கட்டண உயர்வால் கர்நாடக முழுவதும் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…