முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான ப .சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ ,அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து .சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முயற்சித்தனர். ஆனால் சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தனர். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஆனால் அதே விவரத்தில் அமலாக்கத் துறையும் கைது செய்து இருந்ததால் அவர் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது .அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.மேலும் அந்த ஜாமீனில் அவருக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.வழக்கு தொடர்பாக அறிக்கை மற்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இதன் பின்பு சிதம்பரம் சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த நிலையில் வெளியே வந்தார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…