சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த 24 பேர் கைது!

Published by
Rebekal
  • இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல மதுரையில் வந்து தங்கியிருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இவர்களில் இருவர் சிங்களவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையிலிருந்து கனடாவிற்கு செல்வதற்காக கள்ளப்படகின் மூலமாக தூத்துக்குடி வழியே வந்து மதுரையில் தங்கியிருந்த இரண்டு சிங்களர்கள் உட்பட 23 இலங்கையை சேர்ந்த நபர்களும், ஏஜன்ட் ஒருவரும் என 24 பேர் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை கப்பலூரில் வீடு எடுத்து சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்தவர்கள் கடந்த பத்து நாட்கள் தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது அவர்களை கனடாவிற்கு அனுப்புவதற்காக அசோக்குமார் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு மதுரை கப்பலூரில் தங்க வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட அசோக்குமார் என்பவர் தற்போது தலைமறைவாக உள்ள  நிலையில், இந்தியாவிற்குள் தங்கியிருந்த 23 பேர் மற்றும் ஏஜென்ட் ஒருவர் உட்பட 24 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், கனடா நாட்டில் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே அங்கு இருக்கக்கூடிய இலங்கை தமிழர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருவதால் அவர்களிடம் வேலை வாங்கி தருவதாக அசோக்கமார் என்பவர் இவர்களை தொடர்புகொண்டு இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு இவர்கள் 23 பேரையும் சட்டவிரோதமாக அழைத்து மதுரையில் தங்கவைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்த சில போலி ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  மேலும், தலைமறைவாக உள்ள அசோக் குமாரையும் போலீசார் தேடி வருகின்றனராம்.

Published by
Rebekal

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

9 minutes ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

1 hour ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

2 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

4 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

5 hours ago