[Image source : Twitter/@KollamRailway]
தென்கிழக்கு ரயில் பிராந்தியத்தில் 24 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பஹநக பஜார் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் மொத்த இன்டர் லாக்கிங் அமைப்பும் மாற்றப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
மேலும், ஹவுரா-சிஎஸ்எம்டி கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.05க்கு பதிலாக மாலை 4.05 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும். ஹவுரா-சிஎஸ்எம்டி (மும்பை) அஞ்சல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு ஹவுராவிலிருந்து புறப்படும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை SER தண்டவாளங்களை சரிசெய்வதற்காக குறைந்தது 40 ரயில்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து, இப்பொது அணைத்து ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…