ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலி.! இந்தியாவில் உயிரிழப்பின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு.!

Default Image

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலம், சூரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் இன்று ஏற்கனவே 2 பேர் உயிரழிந்த நிலையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் இன்று ஏற்கனவே மகாராஷ்டிராவின் மும்பையில் 63 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பீகார் மாநிலம் பாட்னாவில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரைத்தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலம், சூரத் மருத்துவமனையில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இன்று மட்டுமே 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts