மத்திய பிரதேசத்தில் ஒரு வாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், சோகத்தில் இருந்த பெண் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் எனும் நகரில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், பால்கிக்ஷன் என்பவரின் குடும்பத்தில் அவரது மனைவி சந்திரகலா, மூத்த மகன் சஞ்சய் மற்றும் இளைய மகன் ஸ்வபினீஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்த கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்த உயிரிழப்புகளை நேரில் கண்டு கடும் துக்கத்தில் இருந்த இளைய மருமகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…