மஹாராஷ்டிராவில் 3 மாதங்களே ஆன குழந்தையின் வயிற்றில் சூடு.. காரணம் இதுதான்!

Published by
Surya

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கை காரணமாக, மூன்று மாத குழந்தைக்கு வயிற்றில் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க சூடான அரிவாள் மூலம் வயிற்றில் சூடு வைக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் மெல்காட் பழங்குடி பெல்ட்டைச் சேர்ந்த சிக்கல்தாரா தெஹ்ஸில் உள்ள போர்தா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைக்கு கடந்த சில தினங்களாக வயிற்றில் வீக்கம் வந்துள்ளது. இந்நிலையில், அந்த வீக்கம், இரண்டு நாட்களாக மிக தீவிரம் அடைந்தது.

இதன்காரணமாக, அவனின் பெற்றோர்கள், குழந்தையை ஜூன் 20 தேதி மருத்துவமனைக்கு பதில், ஒரு மாந்திரீகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மந்திரவாதி ஒருவர், குழந்தையின் வயிற்றில் சூடான அரிவாள் மூலம் தீக்காயங்கள் வைத்தால் அவனுக்கு வீக்கம் குணமடையும் என கூறினார்.

அவரின் பேச்சை கேட்ட பெற்றோர், அதன்படி குழந்தைக்கு குழந்தையின் வயிற்றில் சூடான அரிவாள் மூலம் சூடு வைத்தனர். மேலும் குழந்தையை சிகிச்சைக்காக, சுர்னி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பெற்றோர்களின் இந்த செயல், கட்கும்ப் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத் துறையின் பறக்கும் படையினருக்கு தெரிய வந்தது.

இதன்காரணமாக அங்கு விரைந்த அதிகாரிகள், அங்கிருந்த தாய் மற்றும் குழந்தையை மீட்டு, அம்மாவட்ட பொது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். இந்நிலையில், மூடநம்பிக்கையால் குழந்தையின் வயிற்றில் சூடு வைத்ததாக, மகாராஷ்டிராவின் பிளாக் மேஜிக் சட்டத்தின் கீழ், குழந்தையை சூடு வைத்த தாய் மற்றும் தந்தையை சிக்கல்தாரா போலீசார் கைது செய்தனர்.

Published by
Surya

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

12 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

13 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

13 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

14 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

14 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

15 hours ago